Don't Miss!
- News நாளை மாலை 6 மணி வரை வரிசையில் நிற்கும் அனைவரும் வாக்களிக்கலாம்! சத்யபிரத சாகு தகவல்
- Finance மிரட்டும் குஜராத், அசராத வளர்ச்சியில் தமிழ்நாடு..!
- Lifestyle பளபளப்பான முகத்திற்கு தயிர்-எலுமிச்சை ஃபேஸ் பேக்கை ட்ரை பண்ணுங்க..!
- Technology சாதா ஹெல்மெட் தூக்கி போடுவாங்க.. வந்தாச்சு ஏசி ஹெல்மெட்.. சில்லுனு காத்து.. இனி வெயிலை சமாளிக்க முடியும்..
- Sports தோனியை சமாதானப்படுத்த முடியாது.. அந்த விஷயத்திற்கு ரிஷப் பண்ட் தான் சரி.. ரோகித் சர்மா கலகல!
- Automobiles ரூ6 லட்சம் தான் கார் விலை, 4 ஸ்டார் ரேட்டிங்கும் இருக்குது! ஆனா சேல்ஸ் சரியாக ஆகல! என்ன கார் தெரியுமா?
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
என்னாச்சு விஷால்... அவ்ளோதானா திருட்டு டிவிடி போராட்டம்?
குடிகாரன் பேச்சு...விடிஞ்சா போச்சுனு சொல்வாங்க... அந்த வரிசையில சினிமாகாரங்க பேச்சையும் சேர்த்துக்கலாம். மற்றவர்கள் விஷயத்தில் ஓகே... ஆனால் தங்கள் சொந்த பிரச்னைகளையே பேசுகிறார்கள். பின்னர் மறந்துவிடுவார்கள். அதில் முக்கியமானது திருட்டு டிவிடி விவகாரம்.
படம் ரிலீஸான சில நாட்களில், படத்தின் ஹீரோ, இயக்குனர், தயாரிப்பாளர் உள்ளிட்டோர் கமிஷனர் அலுவலகத்தில் திருட்டு டிவிடிக்கு எதிராக புகார் கொடுப்பார்கள். இதனை சம்பிரதாயமாகவே வைத்துள்ளார்கள். அடுத்த சில நாட்களில் படத்தோடு சேர்ந்தே திருட்டு டிவிடி புகாரும் காணாமல்
போய்விடும்.
ஆக, இவர்களுக்கு நிரந்தர தீர்வு தேவையில்லை. திருட்டு டிவிடிக்கு எதிராக மருது விழாவில் அவ்வளவு ஆவேசமாக குரல் கொடுத்த விஷால் கூட அதன் பின்னர் இரண்டு இடங்களில் மனிதன் திருட்டு டிவிடியை பிடித்ததோடு சரி... பின்னர் ஆளைக் காணவில்லை.
ஒரு விஷயத்தைக் கையிலெடுத்துவிட்டால், அதற்கு தீர்வு காணும் வரை ஓயக் கூடாது. நடிகர் சங்கத்தின் நிர்வாகத்தைக் கைப்பற்ற தீயா வேலப் பாத்த மாதிரி, திருட்டு வீடியோவுக்கு எதிராகவும் வேலப் பார்க்க வேண்டாமா?