Don't Miss!
- Sports SRH vs RCB: இந்த தங்கத்த தூக்குங்க.. ஆர்சிபியை அலறவிட்ட தமிழக வீரர்.. நடராஜனால் மிரண்ட கம்மின்ஸ்!
- News தமிழகத்தில் உச்சம் தொடும் கோடை வெப்பம்.. திடீரென முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை.. என்ன மேட்டர்
- Lifestyle இந்த பட்டனை அழுத்தினால் கார் உடனடியாக கூலிங் ஆகிடும்... இது பலருக்கும் தெரியாத விஷயம்..!
- Automobiles 5 வருஷத்துக்கு எந்தவொரு பிரச்சனையும் இல்லாமல் ஓட்டலாம்!! வாரண்டியை வாரி வழங்கும் இவி நிறுவனம்!
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
பிரான்மலை பாடல்கள் இணையதளங்களில் வெளியானது… படக்குழுவினர் அதிர்ச்சி
பிரான்மலை படத்தின் பாடல்கள் அனைத்தும் இணையதளங்களில் வெளியானதால் படக்குழுவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு தயாராகி வரும் பிரான்மலை படத்தில் ஆதவா பாண்டியன் அறிமுக நாயகனாக நடிக்கிறார். இப்படத்தில் இளம்நாயகி நேகா கதாநாயகியாகவும், மதயானை கூட்டம், கொம்பன் படத்தில் நடித்த எழுத்தாளர் வேலராமமூர்த்தி முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
சிறிய இடைவெளிக்கு பின்பு கஞ்சா கருப்பு பிரான்மலை படத்தில் நடிக்கிறார். கமெடிக்கு ப்ளாக் பாண்டி,முத்துகாளை இருவரும் நடிக்கின்றனர். பிரான்மலை தலைப்பிற்கு ஏற்ப கதையின் நம்பகதன்மையை மேம்படுத்த அப்பகுதி மக்களுக்கே நடிப்பு பயிற்சி அளித்து இப்படத்தில் நடிக்க வைத்துள்ளனர்.
பிரான்மலை படத்தின் கதை அம்சத்தை அறிந்து கவிப்பேரரசு வைரமுத்துவே அனைத்து பாடல்களையும் எழுதியிருக்கிறார். மேலும் வைரமுத்து இப்படத்தின் அறிமுக இசை அமைப்பாளர் பாரதி விஸ்காரிடம் "நீண்ட இடைவெளிக்கு பின் அருமையான இசையை அனுபவித்ததாக" மனமகிழ்ந்து பாராட்டி இருக்கிறார் வைரமுத்து.
அறிமுக இயக்குநர் அகரம்காமுரா இப்படத்தை இயக்க, "வளரி கலைக்கூடம்" - R.P.பாண்டியன் தயாரிப்பில் பிரான்மலை திரைப்படம் விரைவில் திரைக்கு வர தயாராகி வருகிறது.
இந்தப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவிற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வரும் நிலையில் பாடல்கள் இணையதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து காவல்நிலையத்தில் புகார் அளிக்க உள்ளதாக பிரான்மலை படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.