பிக்பாஸில் நடந்த சுவாரசியமான சம்பவங்கள்.. இன்றைய டாப் 5 பீட்ஸில்!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடந்த சுவாரசிய சம்பவங்கள் குறித்த தகவல்களை வழங்கியுள்ளார் பிகே.
Recommended Video
பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. இதனை தொடர்ந்து சமூக வலைதளங்கள் உட்பட எங்கு பார்த்தாலும் பிக்பாஸ் குறித்த பேச்சுதான்.

இந்நிலையில் இன்றைய டாப் 5 பீட்ஸில் பிக்பாஸில் நடைபெற்ற சுவாரசிய சம்பவங்களை வீடியோவாக வழங்கியுள்ளார் பிகே. அதன்படி ஆரம்பித்த முதல் நாளே அனிதா சம்பத்துக்கும் சுரேஷ் சக்கரவர்த்திக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் குறித்த தகவல்களை கூறியிருக்கிறார்.
இதேபோல் ஹார்ட் மற்றும் புரோக்கன் ஹார்ட் கொடுக்கும் டாஸ்கின் போது தன்னுடைய அம்மா மாதிரியே இருக்கிறார் அறந்தாங்கி நிஷா என அழுத தகவலையும் கூறியுள்ளார்.
இதேபோல் ஹவுஸ்மேட்ஸ் கடந்து வந்த பாதை குறித்து ஷேர் செய்த போது, வேல் முருகன் கலங்க வைத்தது குறித்தும் கூறியுள்ளார் பிகே. மேலும் சனம் ஷெட்டி மாடியில் இருந்து கீழே விழுந்து சிகிச்சை பெற்ற தகவலையும் பகிரந்துள்ளார் பிகே.
இறுதியாக அறந்தாங்கி நிஷாவின் பேச்சு குறித்தும் பேசியிருக்கிறார். காமெடியாக பேச ஆரம்பித்த நிஷா கடைசியில் கண்ணீர் விட்டு அழுததையும் ரியோ கலாத்ததையும் கூறியுள்ளார் பிகே.


Click it and Unblock the Notifications











