Don't Miss!
- Sports IPL 2024 CSK : உங்களுக்கு வேற வேலையே இல்லையா.. நிம்மதியா இருக்க விடுங்க.. அடிக்க வந்த தோனி
- News இந்தியாவில் எந்த ஜாதி, மத மக்களிடம் அதிக தங்கம் இருக்கு தெரியுமா? டாப்பில் இவங்களா? முழு டேட்டா
- Lifestyle கேரளாவின் அடையாளங்களில் ஒன்றான இந்த குட்டி மாட்டின் பால்தான் உலகிலேயே சத்தான பாலாம் தெரியுமா?
- Finance ரூ.12,500 முதலீடு செஞ்சா ரூ. 1 கோடி கிடைக்குமா.. செம சான்ஸ்..! சூப்பர் திட்டம்.. மிஸ் பண்ணிடாதீங்க!
- Automobiles இப்பவே 13,000த்த தொட்ருச்சா! இந்தியால இருந்து கொண்டு வந்த காருக்கு பேராதரவு வழங்கும் ஜப்பானியர்கள்!
- Technology அள்ளி தரும் BSNL.. வெறும் ரூ.299 போதும்.. தினமும் 3GB டேட்டா.. வாய்ஸ் கால்கள்.. எத்தனை நாள் வேலிடிட்டி?
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
பிரசாந்த் படக் கதையை சுடப் பார்க்கும் விக்னேஷ் சிவன்?
ஒருவழியாக சூர்யாவின் அடுத்த படம் விக்னேஷ் சிவனுடன்தான் என்பது உறுதியாகிவிட்ட்து.
நானும் ரவுடிதான் படத்துக்கு பிறகு விக்னேஷ் சிவன் கோலிவுட்டின் மோஸ்ட் வாண்டட் இயக்குனர் ஆகிவிட்டார். நயன்தாராவுக்கு காதலராகவும் பாதுகாப்பாகவும் இருக்கும் விக்னேஷ் சிவன் அடுத்து சிவகார்த்திகேயனுக்கு கதை சொன்னார். ஏ.எம்.ரத்னம் - விக்னேஷ் சிவன் - சிவகார்த்திகேயன் என சொன்னார்கள். ஆனால் அந்த காம்பினேஷன் உடைந்த்து.
விக்னேஷ் சிவனை கமிட் செய்து நயனை தன் அடுத்த படத்து கதாநாயகியாக்கிய சிவகார்த்திகேயன் விக்னேஷ் சிவனை உட்கார வைத்தார். அடுத்து மோகன் ராஜா, அதற்கடுத்து பொன்ராம், அதற்கும் அடுத்து ரவிகுமார் அப்புறம் தான் விக்னேஷ் சிவன் என்று சிவகார்த்திகேயன் ரயில்வே வெய்ட்டிங் லிஸ்ட் கணக்காக ஒரு லிஸ்டை சொல்ல இது இப்போதைக்கு வேலைக்கு ஆகாது என்பதை உணர்ந்த விக்னேஷ் பிற ஹீரோக்களை பார்க்க ஆரம்பித்தார்.
அப்படி சூர்யாவை பார்த்து கதை சொன்னார். அவர் இழுத்துக்கொண்டே போக ஒருகட்டத்தில் தானே ஹீரோ அவதாரம் எடுக்கலாமா என்ற விபரீத யோசனைக்கும் சென்றார். நல்ல வேளையாக சூர்யா ஓகே சொல்ல காம்பினேஷன் உறுதியானது.
இந்த படத்தின் கதையை கேட்ட சூர்யா வைத்த ஒரே கண்டிஷன் நயன்தாரா படத்தில் இருக்க கூடாது என்பதுதானாம். இதில் விக்னேஷ் சிவனுக்கு கொஞ்சம் வருத்தம் தான்.
சூர்யா விக்னேஷ் சிவன் இணையும் அந்த கதை போலி சிபிஐ ஆபிசர் பற்றியது என்கிறார்கள். அதாவது மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பாலிவுட்டில் அக்ஷய் குமார் நடிப்பில் வெளியாகி ஹிட் அடித்த ஸ்பெஷல் 26 படத்தின் கதை என்கிறார்கள்.
இது ஸ்பெஷல் 26 படத்தின் ரீமேக் உரிமையை வாங்கி வைத்திருக்கு தியாகராஜன், பிரஷாந்த் இருவரையும் டென்ஷனாக்கியுள்ளது. ஸ்பெஷல் 26-ஐ பிரசாந்துக்கு ஸ்பெஷலான படமாக அமைத்துக் கொடுக்க இயக்குநரும் தயாரிப்பாளருமான தியாகராஜன் முயற்சித்துக் கொண்டிருக்கும் நிலையில், இப்படி சைடு கேப்பில் விக்னேஷ் சிவன் அதே கதையை உருவப் பார்ப்பது நியாயம்தானா?
இந்தக் கேள்வியோடு ஒரு பஞ்சாயத்துக்கு வரலாம்!