Don't Miss!
- News நன்றி மறந்த நடிகர் சிரஞ்சீவி? ஆந்திராவில் பாஜக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு.. காங்கிரசுக்கு ஷாக்
- Finance முகேஷ் அம்பானி ஸ்டிரிக்ட் ஆர்டர்..!! 'இங்க' தான் ஆனந்த் அம்பானி - ராதிகா திருமணம்..!
- Automobiles இவ்வளவு கம்மி விலையா? பஜாஜ் பல்சர் 400 பைக்கின் அறிமுக தேதி உறுதியானது!
- Technology பிளிப்கார்ட் பிச்சிக்குது.. வெறும் ரூ.13,999 போதும்.. OIS கேமரா.. 6000mAh பேட்டரி.. 1TB மெமரி.. எந்த மாடல்?
- Sports சிஎஸ்கே அணிக்கு சிக்கல்.. பிளே-ஆஃப் வாய்ப்புக்கு ஆப்பு வைத்த 2 அணிகள்.. இனி என்ன செய்ய வேண்டும்?
- Lifestyle நீங்க ஏ.சி. போட போறீங்களா? இந்த 3 விஷயங்களை செய்ய மறந்துடாதீங்க...!
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
மைல்டு கொரோனா.. மருத்துவமனையில் உள்ளேன்.. யாரும் தொடர்பு கொள்ள வேண்டாம்.. வீடியோ வெளியிட்ட எஸ்பிபி!
சென்னை: பிரபல பின்னணி பாடகரான எஸ்பி பாலசுப்பிரமணியனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Recommended Video
பிரபல பின்னணி பாடகரான எஸ்பி பாலசுப்பிரமணியன் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உட்பட 16க்கும் மேற்பட்ட மொழிகளில் சுமார் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார்.
6 முறை சிறந்த பின்னணி பாடகருக்கான தேசிய விருதை பெற்றுள்ளார். அதோடு ஏராளமான பிலிம் ஃபேர் விருதுகளையும் பல்வேறு மாநில அரசுகளின் விருதுகளையும் பெற்றுள்ளார் எஸ் பி பாலசுப்பிரமணியன்.
சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி..இந்திய அளவில் சாதனை படைத்த பிரபல நடிகரின் மகன்..குவியும் வாழ்த்து!
உடல்நலக்குறைவு
அதுமட்டுமின்றி நாட்டின் மிக உயரிய விருதுகளான மத்திய அரசின் பத்மஸ்ரீ, பம்பூஷன் ஆகிய விருதுகளையும் பெற்றுள்ளார். இந்நிலையில் எஸ்பி பாலசுப்பிரமணியம் கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார்.
எஸ்பிபிக்கு சிகிச்சை
இதனை தொடர்ந்து சென்னை சூளைமேட்டில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சோதனைக்காக சென்றுள்ளார். அப்போது அவருக்கு மைல்டு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அவருக்கு அங்கு சிகிச்சை வழங்கப்படுகிறது.
மைல்டு கொரோனா
இதனை உறுதிப்படுத்தும் வகையில் தனது பேஸ்புக் பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார் எஸ்பி பாலசுப்பிரமணியம். அதில் தனக்கு சளி, காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் கடந்த 3 நாட்களாக இருந்ததாக கூறியுள்ளார். மருத்துவமனையிலும் மைல்ட் கொரோனா என உறுதிப்படுத்தியுள்ளனர்.
மருத்துவமனையில் உள்ளேன்
மேலும் என்னை வீட்டிலேயே தனிமைப்படுத்தி கொண்டு இருக்கலாம் என்று கூறினார்கள். ஆனால் நான் அதை செய்ய விரும்பவில்லை. மருத்துவமனையில் அட்மிட் ஆகியிருக்கிறேன். இங்கு என்னுடைய நண்பர்கள் இருக்கிறார்கள். மருத்துவமனையிலும் நன்றாக பார்த்துக் கொள்கிறார்கள்.
கவலைப்பட வேண்டாம்
நான் நல்ல உடல் நலத்தோடு நலமாக இருக்கிறேன். கோல்டு மட்டும்தான் உள்ளது. இன்னும் இரண்டு நாட்களில் டிஸ்சார்ஜ் ஆகிவிடுவேன். யாரும் என்னுடைய உடல் நிலையை பற்றி கவலைப்பட வேண்டாம்.
எஸ்பிபி வேண்டுகோள்
யாரும் என்னுடைய உடல் நிலை குறித்து விசாரிக்க தொடர்பு கொள்ள வேண்டாம் என்றும் எஸ்பி பாலசுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸில் இருந்து காத்துக் கொள்ளும் வகையில் இந்த லாக்டவுன் நேரத்தில் பல்வேறு விழிப்புணர்வு பாடல்களை பாடினார் எஸ்பிபி என்பது குறிப்பிடத்தக்கது.