Don't Miss!
- News மஞ்சள் கலர் கல்யாண பத்திரிகை.. நாட்டை "ராவணன்" ஆண்டால் என்ன? பொண்ணு பேர் பார்த்தீங்களா? சபாஷ் நெல்லை
- Lifestyle எப்பவும் ஒரே மாதிரி சட்னி செய்யாம.. ஒருமுறை தீயில் சுட்ட தக்காளி சட்னியை செய்யுங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்..
- Sports ரூ.14 கோடி வீரருக்கு ஆப்பு.. லக்னோ பிட்சால் சிஎஸ்கே அணியில் நடக்கப்போகும் மாற்றம்.. ருதுராஜ் முடிவு!
- Technology ரூ.10,000 குள்ள 2.. ரூ.20,000 குள்ள 2.. Redmi-யின் 5 முரட்டு போன்கள் மீது.. வெயிட்டா ரூ.2000 டிஸ்கவுண்ட்!
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
இவரு பேச்சையெல்லாம் கண்டுக்காதீங்க.. இதையெல்லாம் மாத்தமுடியாது.. பிரபல நடிகரை விளாசிய சின்மயி!
சென்னை: மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபடுவது தொடர்பாக சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த பிரபல நடிகரை நடிகை சின்மயி சரமாரியாக விளாசியிருக்கிறார்.
குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. முதலில் வடகிழக்கு மாநிலமான அசாமில் தொடங்கிய இந்தப் போராட்டம் பின்னர் மேற்கு வங்கத்துக்கும் பரவியது.
அங்கு நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடிக்கவே இந்த குடியுரிமை சட்டத்திருத்தத்திற்கான இந்த போராட்டம் நாடு முழுவதும் பற்றியது. இதில் மாணவர்களும் இறங்க போராட்டம் வேற மாதிரியாக சென்றது.
எதிர்க்கட்சிகள்தான்
தமிழகத்திலும் போரட்டத் தீ பற்றியதால் அலர்ட்டான அரசு, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்தது. எதிர்க்கட்சிகள்தான் மாணவர்களை போராட்டத்திற்கு தூண்டி விடுவதாக அரசு தரப்பில் குற்றச்சாட்டு வைக்கப்பட்டு வருகிறது.
சைட் அடிக்கவே
இந்நிலையில் மாணவர்களின் போராட்டம் குறித்து பிரபல நடிகரான ஒய்ஜி மகேந்திரன் தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையாகியுள்ளது. அதாவது, மாணவர்கள் விடுமுறை கிடைக்கும் என்றும் பெண்கள் சைட் அடிப்பார்கள் என்பதை மனதில் வைத்தே போராட்டங்களில் ஈடுபடுவதாக தெரிவித்தார்.
சின்மயி விமர்சனம்
அவரது இந்த பேச்சுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பிரபல பாடகியான சின்மயி ஒய்ஜி மகேந்திரனின் இந்த கருத்து குறித்து கடுமையாக விமர்சித்திருக்கிறார்.
|
மாத்த முடியாது
அதாவது இந்த மனுஷர் சொல்லும் கருத்தையெல்லாம் நாம் கண்டுகொள்ளாமல் அப்படியே விட்டுவிட வேண்டும். அவர்களை மாற்ற முடியாது. அது நேர விரயம்தான் என்று சாடியிருக்கிறார்.
|
நெட்டிசன் கருத்து
சின்மயின் இந்த கருத்துக்கு ஆதரவு பெருகி வருகிறது. சின்மயின் இந்த பதிவை பார்த்த இந்த நெட்டிசன், எனக்கு கவலையாக உள்ளது. அவருக்கும் மகள் மனைவி இருக்கிறார்கள்.. அவர்கள் எப்படி இதை பார்ப்பார்கள் என்று கேட்டிருக்கிறார்.
மீடூவில் புகார்
பாடகி சின்மயி, பாலியல் தொந்தரவுகளால் பாதிக்கப்படும் பெண்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகிறார். கவிஞர் வைரமுத்து தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மீடூவில் புகார் அளித்து பரபரப்பை ஏற்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.