Don't Miss!
- News
கட்டடம் இடிந்து இளம்பெண் பலியான விவகாரம்.. இடிக்கும் பணியை உடனே நிறுத்த சென்னை மாநகராட்சி ஆர்டர்!
- Finance
Budget 2023:உணவு, உரம், எரிபொருள் மீதான ,மானியங்கள் குறைக்கப்படலாம்.. அப்படி நடந்தால் என்னவாகும்?
- Sports
ஆடுகளத்தை தவறாக கணித்தோம்.. கடைசி ஓவர் எல்லாத்தையும் மாற்றிவிட்டது.. ஹர்திக் பாண்டியா பேச்சு
- Lifestyle
உங்களுக்கு நரை முடி மற்றும் வறண்ட முடி இருக்கா? அப்ப இந்த டிப்ஸ்கள ஃபாலோ பண்ணுங்க...!
- Automobiles
முக்கியமான சாலையை கிழித்து கொண்டு சென்ற விசித்திரமான வாகனம்!! பதற்றத்தில் வழிவிட்ட வாகன ஓட்டிகள்...
- Technology
நம்பமுடியாத அம்சங்களுடன் மலிவு விலையில் இறங்கிய பிரபல நிறுவனத்தின் ஸ்மார்ட்வாட்ச்.!
- Travel
காலம் காலமாக இஸ்லாமியர்கள் வழிபடும் சிவன் கோவில் – மனமுருகி வேண்டினால் கேட்டது கிடைக்குமாம்!
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
பழம்பெரும் பின்னணி பாடகர் பி.பி.ஸ்ரீனிவாஸ் மரணம்... திரை உலகினர் கண்ணீர் அஞ்சலி

ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் 1930ஆம் ஆண்டு செப்டம்பர் 22ஆம் தேதி பிறந்தவர் பி.பி.ஸ்ரீனிவாஸ். ஜெமினியின் ஹிந்திப் படமான மிஸ்டர் சம்பத் என்ற படத்தில் 1952ல் இந்திப்படத்தில் அறிமுகமானார்.
அவரது மென்மையான குரல் அவருக்கு பெருவாரியான ரசிகர்களை பெற்றுத் தந்தது. தமிழ் மட்டுமல்லாது, தெலுங்கு, மலையாளம் உள்பட 12 மொழிகளில் பி.பி.ஸ்ரீனிவாஸ் பாடல் பாடியுள்ளார்.
தமிழில் ஜெமினிகணேசனுக்கும், கன்னடத்தில் ராஜ்குமாருக்கும் அதிக அளவில் பாடல்களை பாடியுள்ளார். ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்கள் பாடியுள்ள பி.பி.ஸ்ரீனிவாஸ்,ரோஜா மலரே ராஜகுமாரி,காலங்களில் அவள் வசந்தம் போன்ற காலத்தால் அழியாத பல பாடல்களைப் பாடியுள்ளார். வயதானதால் பின்னணி பாடாமல் ஒதுங்கியிருந்தார் பி.பி.ஸ்ரீனிவாஸ்.
இந்த நிலையில் சென்னை சிஐடி நகரில் வசித்து வந்த பி.பி. ஸ்ரீனிவாஸ், ஞாயிறு மதியம் மாரடைப்பால் மரணம் அடைந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
பி.பி.ஸ்ரீனிவாஸ் உடலும் திரைஉலக பின்னணி பாடகர்கள் பலரும் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
ஜெயலலிதா இரங்கல்
சி.ஐ.டி. நகரில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்பட்டுள்ளது. திரையுலகப் பிரமுகர்கள், ரசிகர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
தமிழக அரசு சார்பில் செய்தித் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நேரில் அஞ்சலி செலுத்தினார். ஸ்ரீனிவாசின் மறைவுக்கு முதலமைச்சர் ஜெயலலிதா உள்பட பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இன்று இறுதிச் சடங்கு நடைபெறும் என பி.பி.ஸ்ரீனிவாஸ் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.