Don't Miss!
- News கோவை, தஞ்சாவூர், திருவாரூர்.. தாகம் தீர்க்கும் மின்வாரிய அணைகள்.. குடிநீர் வடிகால் வாரியம் அதிரடி
- Technology போச்சு! Paytm-ஐ தொடர்ந்து Kotak Mahindra-க்கு ஆப்பு வைத்த RBI.. இனி உங்க Account, Credit Card-லாம் என்ன ஆகும்?
- Lifestyle இந்த உணவுகளை கண்டிப்பாக பிரஷர் குக்கரில் சமைக்கக்கூடாது.. ஏன் தெரியுமா?
- Finance டீ கடையில் கூட இப்ப கிரெடிட் கார்டு பேமெண்ட் தான்.. ரூ.1 லட்சம் கோடியை தாண்டி புதிய சாதனை..!
- Automobiles துபாயில் சென்னை விமானத்தை தவறவிட்ட 15 வயது சிறுமி! அடுத்து நடந்த விஷயம் தான் அதிசயம்!
- Sports தோனியே சரி.. முஸ்தஃபிசுர்-க்கு பதிலாக வரும் ஸ்பின்னர்.. சிஎஸ்கே அணியில் நடக்கப் போகும் மாற்றம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
பழம்பெரும் பின்னணி பாடகர் பி.பி.ஸ்ரீனிவாஸ் மரணம்... திரை உலகினர் கண்ணீர் அஞ்சலி
ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் 1930ஆம் ஆண்டு செப்டம்பர் 22ஆம் தேதி பிறந்தவர் பி.பி.ஸ்ரீனிவாஸ். ஜெமினியின் ஹிந்திப் படமான மிஸ்டர் சம்பத் என்ற படத்தில் 1952ல் இந்திப்படத்தில் அறிமுகமானார்.
அவரது மென்மையான குரல் அவருக்கு பெருவாரியான ரசிகர்களை பெற்றுத் தந்தது. தமிழ் மட்டுமல்லாது, தெலுங்கு, மலையாளம் உள்பட 12 மொழிகளில் பி.பி.ஸ்ரீனிவாஸ் பாடல் பாடியுள்ளார்.
தமிழில் ஜெமினிகணேசனுக்கும், கன்னடத்தில் ராஜ்குமாருக்கும் அதிக அளவில் பாடல்களை பாடியுள்ளார். ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்கள் பாடியுள்ள பி.பி.ஸ்ரீனிவாஸ்,ரோஜா மலரே ராஜகுமாரி,காலங்களில் அவள் வசந்தம் போன்ற காலத்தால் அழியாத பல பாடல்களைப் பாடியுள்ளார். வயதானதால் பின்னணி பாடாமல் ஒதுங்கியிருந்தார் பி.பி.ஸ்ரீனிவாஸ்.
இந்த நிலையில் சென்னை சிஐடி நகரில் வசித்து வந்த பி.பி. ஸ்ரீனிவாஸ், ஞாயிறு மதியம் மாரடைப்பால் மரணம் அடைந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
பி.பி.ஸ்ரீனிவாஸ் உடலும் திரைஉலக பின்னணி பாடகர்கள் பலரும் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
ஜெயலலிதா இரங்கல்
சி.ஐ.டி. நகரில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்பட்டுள்ளது. திரையுலகப் பிரமுகர்கள், ரசிகர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
தமிழக அரசு சார்பில் செய்தித் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நேரில் அஞ்சலி செலுத்தினார். ஸ்ரீனிவாசின் மறைவுக்கு முதலமைச்சர் ஜெயலலிதா உள்பட பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இன்று இறுதிச் சடங்கு நடைபெறும் என பி.பி.ஸ்ரீனிவாஸ் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.