Don't Miss!
- Lifestyle தளர்ந்து போன சருமத்தை இறுக்கமாக்கி ஜொலிக்கிற மாதிரி மாத்த ஆசைப்படுறீங்களா? இந்த இயற்கை பொருட்களை யூஸ் பண்ணுங்க
- Sports LSG vs CSK : 101 மீ பறந்த சிக்ஸ்.. மீண்டும் அரங்கேறிய மேஜிக்.. ஒற்றை ஆளாக ஆட்டத்தை மாற்றிய தோனி!
- News கலக்கிய கள்ளக்குறிச்சி.. அதிகபட்ச வாக்குகள் பதிவு! உற்றுநோக்கும் வேட்பாளர்கள்! கள நிலவரம் என்ன
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Technology ஆத்தாடி.. ஒரே போனை வைத்து.. இந்தியாவில் சம்பவம் செய்ய பார்க்கும் Samsung.. பட்ஜெட்ல அறிமுகமாகும் புது Mobile..
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
- Automobiles ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
தமிழ் ராக்கர்ஸை நண்பனாக பாருங்க: விஷாலுக்கு ஆர்.கே செல்வமணி கோரிக்கை
Recommended Video
சென்னை: தமிழ் ராக்கர்ஸை எதிரியாக பார்ப்பதை விட நண்பனாக பார்த்தால் நன்றாக இருக்கும் என்று நான் விஷாலுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன் என ஆர்.கே. செல்வமணி தெரிவித்துள்ளார்.
விஷால், சமந்தா முதல்முறையாக ஜோடி சேர்ந்துள்ள படம் இரும்புத்திரை. புதுமுகம் மித்ரன் இயக்கியுள்ள இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
இரும்புத்திரை இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. விழாவில் கலந்து கொண்ட இயக்குனர் ஆர்.கே. செல்வமணி பேசியதாவது,
பேச்சு
மித்ரன் முதல் படத்திலேயே சிறப்பாக இரண்டு வேலைகள் செய்துள்ளார். சிறப்பாக படம் எடுத்துள்ளார். மேடையில் பேசவும் தெரிந்து வைத்துள்ளார். எனக்கு மேடை ஏற 20 ஆண்டுகள் ஆனது. பாரதிராஜாவை சந்தித்த பிறகே எனக்கு மேடை ஏறும் தைரியம் வந்தது.
அமிதாப் பச்சன்
அதிரடி பாடலில் விஷாலை பார்த்தபோது அமிதாப் பச்சனை பார்த்தது போன்று இருந்தது. விஷால் ஒரு மிகச் சிறந்த மனிதர். அவரின் பாரம்பரியம் அப்படி. மற்றவர்களுக்கு உதவி செய்வதில் விஷால் தனது தந்தையை பின்பற்றுகிறார் என்று நினைக்கிறேன்.
யுவன்
யுவன் ஷங்கர் ராஜா என் காதலி. எப்பொழுதுமே தூரத்திலேயே இருக்கிறார். 125 படம் பண்ணிட்டார் என்பது எனக்கு மிகப்பெரிய ஆச்சரியமாக உள்ளது. முதல் படம் நான் தான் அவரை அறிமுகம் செய்வதாக இருந்தது. பூஜை எல்லாம் போட்டோம். அதில் இருந்து அவர் தள்ளித் தள்ளியே போகிறார். அடுத்தவரின் காதலியாகவே நான் பார்க்க வேண்டி இருக்கிறது. என் பட இசையமைப்பாளராக பார்க்கும் நிலை வரவில்லை. அது நிச்சயம் வரும்.
லவ் பேர்ட்
விஷால் இன்னும் ஆங்ரி பேர்டாகவே இருக்கிறார். லவ் பேர்டாக மாறவில்லை என்று நினைக்கிறேன். மக்கள் படம் பார்ப்பதை நிறுத்தவில்லை. எங்கு பார்க்கிறார்கள் என்பதே கேள்வி. அவர்கள் வீட்டில் இருந்து பார்க்க விரும்பினால் அதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.
நண்பன்
தமிழ் ராக்கர்ஸை எதிரியாக பார்ப்பதை விட நண்பனாக பார்த்தால் நன்றாக இருக்கும் என்று நான் விஷாலுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன். மறுவாரம் போட்டான், மறுநாள் போட்டான், இன்று ரிலீஸ் அன்றே போடுகிறான். விரைவில் ரிலீஸுக்கு முன்பே போடும் சூழ்நிலை வந்துவிடும் போன்று. ஏன் என்றால் தமிழ் திரைப்படத் துறையிடம் இருந்து ஜி.எஸ்.டி. வாங்கும் அரசாங்கங்கள் அதை பாதுகாக்க எந்த நடவடிக்கையும் எடுப்பது இல்லை என்றார் செல்வமணி.