Don't Miss!
- News "ஒழுங்கா சொத்தை பிரிச்சு கொடு.." தந்தையை மிக கொடூரமாக தாக்கிய மகன்.. பதைபதைக்க வைக்கும் சம்பவம்
- Automobiles டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகள் ஓரங்கட்ட படுகிறதா? சேல்ஸ் குறைஞ்சிக்கிட்டே வருது... பஜாஜ் ஹாப்பி!!
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Lifestyle 100 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள திரிகிரக யோகம்: அடுத்த 5 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்..
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
தமிழ் ராக்கர்ஸை நண்பனாக பாருங்க: விஷாலுக்கு ஆர்.கே செல்வமணி கோரிக்கை
Recommended Video
சென்னை: தமிழ் ராக்கர்ஸை எதிரியாக பார்ப்பதை விட நண்பனாக பார்த்தால் நன்றாக இருக்கும் என்று நான் விஷாலுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன் என ஆர்.கே. செல்வமணி தெரிவித்துள்ளார்.
விஷால், சமந்தா முதல்முறையாக ஜோடி சேர்ந்துள்ள படம் இரும்புத்திரை. புதுமுகம் மித்ரன் இயக்கியுள்ள இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
இரும்புத்திரை இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. விழாவில் கலந்து கொண்ட இயக்குனர் ஆர்.கே. செல்வமணி பேசியதாவது,
பேச்சு
மித்ரன் முதல் படத்திலேயே சிறப்பாக இரண்டு வேலைகள் செய்துள்ளார். சிறப்பாக படம் எடுத்துள்ளார். மேடையில் பேசவும் தெரிந்து வைத்துள்ளார். எனக்கு மேடை ஏற 20 ஆண்டுகள் ஆனது. பாரதிராஜாவை சந்தித்த பிறகே எனக்கு மேடை ஏறும் தைரியம் வந்தது.
அமிதாப் பச்சன்
அதிரடி பாடலில் விஷாலை பார்த்தபோது அமிதாப் பச்சனை பார்த்தது போன்று இருந்தது. விஷால் ஒரு மிகச் சிறந்த மனிதர். அவரின் பாரம்பரியம் அப்படி. மற்றவர்களுக்கு உதவி செய்வதில் விஷால் தனது தந்தையை பின்பற்றுகிறார் என்று நினைக்கிறேன்.
யுவன்
யுவன் ஷங்கர் ராஜா என் காதலி. எப்பொழுதுமே தூரத்திலேயே இருக்கிறார். 125 படம் பண்ணிட்டார் என்பது எனக்கு மிகப்பெரிய ஆச்சரியமாக உள்ளது. முதல் படம் நான் தான் அவரை அறிமுகம் செய்வதாக இருந்தது. பூஜை எல்லாம் போட்டோம். அதில் இருந்து அவர் தள்ளித் தள்ளியே போகிறார். அடுத்தவரின் காதலியாகவே நான் பார்க்க வேண்டி இருக்கிறது. என் பட இசையமைப்பாளராக பார்க்கும் நிலை வரவில்லை. அது நிச்சயம் வரும்.
லவ் பேர்ட்
விஷால் இன்னும் ஆங்ரி பேர்டாகவே இருக்கிறார். லவ் பேர்டாக மாறவில்லை என்று நினைக்கிறேன். மக்கள் படம் பார்ப்பதை நிறுத்தவில்லை. எங்கு பார்க்கிறார்கள் என்பதே கேள்வி. அவர்கள் வீட்டில் இருந்து பார்க்க விரும்பினால் அதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.
நண்பன்
தமிழ் ராக்கர்ஸை எதிரியாக பார்ப்பதை விட நண்பனாக பார்த்தால் நன்றாக இருக்கும் என்று நான் விஷாலுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன். மறுவாரம் போட்டான், மறுநாள் போட்டான், இன்று ரிலீஸ் அன்றே போடுகிறான். விரைவில் ரிலீஸுக்கு முன்பே போடும் சூழ்நிலை வந்துவிடும் போன்று. ஏன் என்றால் தமிழ் திரைப்படத் துறையிடம் இருந்து ஜி.எஸ்.டி. வாங்கும் அரசாங்கங்கள் அதை பாதுகாக்க எந்த நடவடிக்கையும் எடுப்பது இல்லை என்றார் செல்வமணி.
-
கில்லி ரிலீஸ் போது மிஸ்ஸானது.. 20 வருஷம் கழிச்சு ரீ-ரிலீஸில் நடந்திருக்கு.. நாகேந்திர பிரசாத் எமோஷனல்
-
ரஜினிகாந்துக்கு 300 கோடி சம்பளமா?.. பலருக்கு தூக்கமே போயிடுமே பாஸ்.. டைட்டில் மட்டும் தான் ‘கூலி’!
-
பேயாட்டம்!.. கில்லி படத்தை பார்த்துட்டு தியேட்டரில் பெண்கள் பார்த்த வேலை.. பசங்களே மிரண்டுட்டாங்க!