Don't Miss!
- News கர்நாடகா: குமாரசாமி, பிரஜ்வல், டிகே சுரேஷ்.. அதிகாரத்தை கைப்பற்ற முட்டி மோதும் 'கவுடா குடும்பங்கள்'!
- Lifestyle கோடை காலத்தில் முட்டை சாப்பிடலாமா? கூடாதா? நிபுணர்கள் சொல்லுவது என்ன?
- Automobiles தார் ரோடு, பாறைகள் நிறைந்த ஆஃப்-ரோடு எதா இருந்தாலும் ஒரு கை பாத்திடலாம்! இந்தியாக்கு ஏத்த கார் விராங்ளர்!
- Technology உங்க மொபைலில் கூகுள் பே, போன் பே, பேடிஎம் செயலிகள் இருக்கா? இதை கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க.. ஏன்?
- Sports தமிழக வீரரால் நடந்த மாற்றம்.. குஜராத் அணிக்கு ஆப்பு வைத்த சுப்மன் கில்.. ஆட்டத்தை மாற்றிய ஒரு முடிவு
- Finance ஆதார் அட்டை தொலைஞ்சி போயிடுச்சா.. கவலை வேண்டாம்.. இதை மட்டும் பாலோ பண்ணுங்க..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
மாமனார், மாமியாரை ஒதுக்கி வைத்த கமீலாவுக்கு ஓட்டு போடாதீங்க: நாசர் தம்பி கண்ணீர்
Recommended Video
சென்னை: மாமனார், மாமியாரை கவனிக்காத கமீலாவுக்கு யாரும் ஓட்டு போடாதீர்கள் என்று நாசரின் தம்பி கண்ணீருடன் கோரிக்கை விடுத்துள்ளார்.
நடிகர் நாசரின் மனைவி கமீலா மக்கள் நீதி மய்யம் சார்பில் மத்திய சென்னை தொகுதியில் போட்டியிடுகிறார். அவரது வேட்புமனு ஏற்கப்பட்டு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில் நாசரின் தம்பி ஜவகர் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது அவர் கூறியதாவது,
நாசர்
சொந்த மாமனார், மாமியாரை பார்த்துக் கொள்ளாதவர் கமீலா. பெற்றவர்களை கண்டு கொள்ளாதவர் நாசர். நாங்கள் மிகவும் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறோம். மேடைகளில் நல்லவர் போன்று பேசும் நாசர் தனது மனைவியின் பேச்சை கேட்டுக் கொண்டு பெற்றோரையே மறந்துவிட்டார்.
தகுதி
கமீலாவுக்கு தேர்தலில் போட்டியிட தகுதி இல்லை. முதலில் அவருக்கு சீட்டே கொடுத்திருக்கக் கூடாது. அவருக்கு யாரும் ஓட்டு போடாதீர்கள். மனவளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ள தம்பி இருக்கிறார். அவரையும் நான் தான் பார்த்துக் கொள்கிறேன்.
தன்னை பற்றிய உண்மையை பப்ளிக்கா சொன்ன விஜய் சேதுபதி ஹீரோயின்
ஜவகர்
நாசரும், கமீலாவும் என்னை கொலை செய்யவும் தயங்க மாட்டார்கள். நான் கொலை செய்யப்பட்டால் அதற்கு நாசர், கமீலா, அவரின் மச்சான் ஆகியோர்தான் காரணம்.
கட்சி
நாசரின் மனைவி என்பதால் கமீலாவுக்கு சீட் கொடுப்பதா?. அதை தவிர அவருக்கு வேறு என்ன தகுதி இருக்கிறது. எனக்கு பின்னால் எந்த கட்சியும் இல்லை. நானாகத் தான் பேசுகிறேன் என்று கூறி கண்ணீர் வடித்தார் அவர்.