Don't Miss!
- Finance TATA Sons நிறுவனத்தில் ஓரேயோரு பங்கு வைத்திருக்கும் மர்ம நபர்? யார் இவர்?! JRD டாடா-வுடன் நெருக்கம்!
- News கோயிலில் பிரார்த்தனை செய்து பிரசாரத்தை தொடங்கிய செஞ்சி மஸ்தான்.. டீ போட்டு வாக்கு சேகரித்தார்
- Sports 4,4,6.. உங்க ஸ்பின்னெல்லாம் என்னிடம் எடுபடாது.. கேகேஆர் அணியின் அஸ்திவாரத்தை ஆட்டிய கேமரூன் க்ரீன்!
- Technology கஸ்டமர்களுக்கு வந்த திடீர் மெசேஜ்! சத்தமின்றி BSNL சேவையில் புதிய மாற்றம்.. ஆப்பிற்குள் காத்திருந்த அதிர்ச்சி!
- Automobiles பைக் வாங்குவதற்கு பதில் இப்படியொரு காரை வாங்கிடலாம்!! மைலேஜை வாரி வழங்குது... 2024 ஸ்விஃப்ட்!
- Lifestyle கருவுறுதல் பிரச்சினையை குணப்படுத்தணுமா? இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் உணவில் சேர்த்துக்கோங்க...!
- Travel தமிழ்நாட்டிலேயே பாதுகாப்பான சுற்றுலாத் தலங்கள் இவை தான் – பெண்களாக, குடும்பங்களாக செல்ல ஏற்ற இடங்கள்!
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
ஆந்திர, தெலுங்கானா மக்களே முடிந்த அளவு உதவிகளை வழங்குங்கள்... நம்ம சென்னைக்காக - சமந்தா
ஹைதராபாத்: "ஆந்திர, தெலுங்கானா மக்களே உங்களால் முடிந்த அளவு உதவிகளை வழங்குங்கள் நம்ம சென்னைக்காக" என்று நடிகை சமந்தா தெலுங்கு மக்களை கேட்டுக் கொண்டிருக்கிறார்.
சென்னை மற்றும் கடலூர் மக்களை மிகவும் வாட்டி வதைத்த கன மழையால் மக்களின் வாழ்வாதரங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு இருக்கின்றன.
இந்நிலையில் மழையால் பாதிக்கப்பட்ட கடலூர் மற்றும் சென்னை மக்களுக்கு தெலுங்கு நடிகர்கள் ஒன்றிணைந்து மக்களிடம் பொருட்களைத் திரட்டி பெரிய டிரக்குகள் மூலம் தமிழகத்திற்கு அனுப்பி வைக்கின்றனர்.
இந்தப் பணியில் நடிகை சமந்தாவும் தன்னை இணைத்துக் கொண்டிருக்கிறார். 'மனமெட்ராஸ் கொசம்' என்ற ஒரு அமைப்பை நிறுவி அதன் மூலம் அத்தியாவசியப் பொருட்களை நடிக, நடிகையர் திரட்டி வருகின்றனர்.
மக்கள் அளிக்கும் நிவாரணப் பொருட்களை ராமநாயுடு ஸ்டுடியோவில் வந்து அளிக்குமாறு நடிகர்கள் மக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளனர்.
Sincerely request you guys to please donate as much as possible . #ManaMadrasKosam pic.twitter.com/QRsXsCES87
— Samantha Ruth Prabhu (@Samanthaprabhu2) December 6, 2015
இந்நிலையில் நடிகை சமந்தா "ஆந்திர, தெலுங்கானா மக்களே! உங்களிடம் உண்மையாக வேண்டிக் கொள்கிறேன். உங்களால் எவ்வளவு உதவிகளை வழங்க முடியுமோ அவ்வளவு உதவிகளை வழங்குங்கள் நம்ம சென்னைக்காக"
என்று கேட்டுக் கொண்டிருக்கிறார். சமந்தாவின் சொந்த ஊர் சென்னை பல்லாவரம் என்பது குறிப்பிடத்தக்கது.