மகாத்மா காந்தி கொலைச் சதி திரைப்படமாகிறது!

By Shankar

The Men Who Killed Gandhi
மும்பை: காந்தியடிகள் சுட்டுக் கொல்லப்பட்டதன் பின்னணியில் நடந்த சதித் திட்டத்தை The Men Who Killed Gandhi என்ற பெயரில் படமாக்கத் திட்டமிட்டுள்ளனர்.

நாடு சுதந்திரமடைந்த சில மாதங்களில் 1948ம் ஆண்டு ஜனவரி 30-ம் தேதி காந்தியடிகள் கொல்லப்பட்டார். நாதுராம் கோட்சே என்பவன் காந்தியை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றான்.

ஆனால் இந்தக் கொலை ஒரு தனிமனித முயற்சி அல்ல. இதன் பின்னணியில் பெரிய இயக்கமே திட்டமிட்டு சதி வேலை செய்து வந்தது.

இந்த சதிகள் குறித்து விரிவாக The Men Who Killed Gandhi என்ற தலைப்பில் ஒரு புத்தகம் எழுதியுள்ளார் மனோகர் மல்கோங்கர்.

இவர் பிர்லா ஹவுசில் காந்தி வசித்த வீட்டுக்கு மூன்றாவது வீட்டில் குடியிருந்தவர். எனவே அவருக்கு முழு விவரங்களும் தெரியும். அத்துடன் காந்தியை சுட்ட கோட்சேவின் உறவினர்களை நேரில் சந்தித்து பேசி அவர்கள் சொன்ன தகவல்களையும் இப்புத்தகத்தில் சேர்த்து உள்ளார்.

இந்த புத்தகத்தை அடிப்படையாக வைத்து அதே பெயரில் இப்படம் தயாராகிறது. சித்தார்த் சென்குப்தா இயக்குகிறார்.

காந்தி கொலை, இந்திய விடுதலை மற்றும் வரலாற்றுடன் பின்னிப் பிணைந்தது. எனவே காந்தியின் சுதந்திர போராட்டங்கள், அவரை கொல்ல வகுக்கப்பட்ட திட்டங்கள் கோட்சேயின் பின்னணி விவரங்கள், காந்தியை அவன் வேவு பார்த்தது மற்றும் சுட்டுக் கொன்றது போன்ற அனைத்தும் படத்தில் இடம்பெறுகின்றன.

நடிகர் - நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடக்கிறது. 2014-ம் ஆண்டு காந்தியின் 66வது நினைவு நாளையொட்டி இந்தப் படத்தை வெளியிடுகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X