Don't Miss!
- News நீ ஹெல்ப்பர் கேள்வி கேட்காதே.. அரசு வண்டியில் பீர் குடித்த இபி ஆபிசர்.. மறக்க முடியாத பரிசு..வீடியோ
- Technology டீஸரே மிரளுது.. உலக ரசிகர்களை வியப்படைய செய்த Nothing.. புதுசா 2 ப்ராடக்ட்.. என்னென்ன எதிர்பார்க்கலாம்?
- Lifestyle பழங்கால போட்டோக்களில் யாராவது சிரிச்சு நீங்க பாத்திருக்கீங்களா? பார்த்திருக்க வாய்ப்பேயில்லை... ஏன் தெரியுமா?
- Finance சென்செக்ஸ்: வருடத்தின் கடைசி நாள் ரூ.128.8 லட்சம் கோடி லாபம்.. பண மழையில் முதலீட்டாளர்கள்..!!
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Automobiles மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
- Sports SRH vs GT : பல்தான்ஸ்.. நமக்கு இவ்வளவு பெரிய சோதனை வந்தது ஏன்? ஓய்வறையில் ஓபனாக பேசிய ஹர்திக்!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
பிரதமர் மோடி பற்றிய குறும்படத்திற்கு குவியும் பாராட்டுக்கள்!
பிரதமர் மோடியை மையமாக வைத்து தயாராகியுள்ள குறும்படம் பாராட்டுக்களை பெற்றுள்ளது.
Recommended Video
டெல்லி: இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் பால்ய வயது வாழ்க்கையைத் தழுவி எடுக்கப்பட்டுள்ள குறும்படம் பாராட்டுக்களை பெற்றுள்ளது.
32 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்த குறும்படத்திற்கு சலோ ஜீத்தே ஹெய்ன் என்று பெயரிட்டுள்ளனர். இக்குறும்படத்தை "டிங்யா" என்ற மராத்தி படத்தை இயக்கிய மங்கேஷ் கடவாலே இயக்கியுள்ளார். மகாவீர் ஜெயின் மற்றும் புஷன் குமார் இணைந்து தயாரித்துள்ளனர்.
இப்படத்தில் நரு என்ற சிறுவன் கதாப்பாத்திரம் பிரதமர் நரேந்திர மோடியின் பால்ய வயது வாழ்க்கையிலிருந்து தழுவி சித்தரிக்கப்பட்டுள்ளது. நரு யாருக்காக நீ வாழ்கிறாய் என கேள்வி கேட்டுக்கொள்கிறான்.
பிறகு விவேகானந்தரின் புத்தகத்தைப் படிக்கும்போது அதற்கான விடை கிடைக்கிறது. "யார் மற்றவர்களுக்காக வாழ்கிறார்களோ அவர்களே வாழ்வார்கள்" என்ற விவேகானந்தரின் பொன்மொழியைப் பின்பற்றி நரு வாழ ஆரம்பிக்கிறான்.
ரயில் நிலையத்தில் தேனீர் விற்பது, விவேகானந்தரின் பொன்மொழிகளை பின்பற்றி வாழ்க்கையை வாழ்வது என பிரதமர் நரேந்திர மோடியுடன் தொடர்புடைய நிறைய விஷயங்களை இப்படத்தில் காட்சிப்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.
இக்குறும்படம் பிரத்தியேகமாக குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்துக்கு திரையிட்டு காண்பிக்கப்பட்டுள்ளது. படத்தை பார்த்த ராம்நாத் கோவிந்த படக்குழுவினரையும் நருவாக நடித்த சிறுவனையும் வெகுவாக பாராட்டியுள்ளார்.
#PresidentKovind watched the film Chalo Jeete Hain at a special screening at the Rashtrapati Bhavan Cultural Centre. Directed by Mangesh Hadawale, the film captures the theme of childhood and innocence, empathy and fraternity pic.twitter.com/auTWpyK8cP
— President of India (@rashtrapatibhvn) July 24, 2018
அதேபோல், நேற்று ராஜ்யசபா தலைமைச்செயலக அரங்கில் திரையிடப்பட்டது. துணை குடியரசுத்தலைவர் வெங்கையா நாயுடு, மத்திய அமைச்சர்கள் பியூஷ் கோயல், ரவி சங்கர் பிரசாத், ராஜ்யவர்தன் ரத்தோர், ஜெயந்த் சின்கா மற்றும் ஜேபி,நட்டா உள்ளிட்டோர் கண்டுகளித்தனர். இக்குறும்படம் ஊக்கமூட்டும் வகையில் அமைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இக்குறும்படம் ஜூலை 29ஆம் தேதி ஸ்டார் நெட்வொர்க் மற்றும் ஹாட்ஸ்டாரில் வெளியிடப்பட உள்ளது.