Don't Miss!
- Finance மக்கள் அதிகம் வாங்குவதாலேயே தங்கம் விலை உயர்கிறதா..? உண்மை என்ன..?!
- Automobiles பெட்ரோல் போடுவதை போல ஹைட்ரஜனை நிரப்பிட்டா 3,000 கிமீ நிற்காம போகும்! உலக சாதனை படைத்த ரயில்!
- News நான் கேட்டது ‘அவள்’.. கடவுள் கொடுத்தது ‘அவல்’.. சரி சாப்டுட்டு வேற வேலையை பார்ப்போம்!
- Sports மும்பை பாணியில் கம்பீர் எடுத்த முடிவு.. 16 வயது சிறுவனை ஒப்பந்தம் செய்த கேகேஆர்.. யாருப்பா அந்த பையன்?
- Lifestyle ஆப்பிள் சீடர் வினிகருடன் இந்த ஒரு பொருளை கலந்து குடிச்சா மாரடைப்பும் வராது.. இதய அடைப்பும் சரியாகும் தெரியுமா?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Technology அம்மா வாங்க.. ஐயா வாங்க! கிட்டத்தட்ட பாதி விலை டிஸ்கவுண்ட்.. Amazon-ல் கூவிக்கூவி விற்கப்படும் ஐந்து 4K TVகள்!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
இந்திய சினிமா ஜாம்பவான் திலீப் குமார் மறைவு... பிரதமர் மோடி, ராகுல் காந்தி இரங்கல்
டெல்லி : இந்திய சினிமாவின் ஜாம்பவான் திலீப் குமார் உடல் மூப்பு காரணமாக மும்பையில் உயிரிழந்துள்ளார்.
அவரது மறைவிற்கு திரையுலக பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ராகுல் காந்தி உள்ளிட்டவர்களும் திலீப் குமாரின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.
பாலிவுட்டின் முதல் கான் நடிகர்.. முகமது யூசுப் கான் திலீப் குமாராக எப்படி மாறினார் தெரியுமா?
நடிகர் திலீப் குமார்
இந்திய சினிமாவின் மறக்க முடியாத அங்கமாக திகழ்ந்தவர் நடிகர் திலீப் குமார். 60 ஆண்டுகளுக்கும் மேலாக பாலிவுட்டில் தன்னுடைய நடிப்பால் ரசிகர்களை உற்சாகப்படுத்திய திலீப் குமார், வயது மூப்பு காரணமாக கடந்த சில வருடங்களாக நடிக்காமல் ஓய்வு எடுத்து வந்தார்.
தீவிர சிகிச்சை
கடந்த சில மாதங்களாக இவர் வயது மூப்பு காரணமாக பல்வேறு உடல் உபாதைகளுக்கு உள்ளாகி வந்தார். இதனிடையே மூச்சுத் திணறல் காரணமாக கடந்த மாதம் 30ம் தேதி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட இவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
பிரதமர் மோடி அஞ்சலி
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை அவரது உயிர் பிரிந்தது. இதையடுத்து அவருக்கு திரைத்துறையினர் மற்றும் அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். பிரதமர் மோடியும் திலீப் குமாரின் மறைவிற்கு தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.
கலை உலகிற்கு இழப்பு
திலீப்குமார் சினிமாவின் ஜாம்பவானாக அறியப்படுகிறார். அவரது சிறப்பான நடிப்பால் அனைத்து தலைமுறையினர் அவரை கொண்டாடுகின்றனர். அவரது மறைவு கலை உலகிற்கு மிகப்பெரிய இழப்பு என்று தெரிவித்துள்ள அவர், அவரது குடும்பத்தினர் மற்றும் ரசிகர்ளுக்கு ஆறுதல் தெரிவித்துள்ளார்.
ராகுல் காந்தி இரங்கல்
இதேபோல காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் திலீப் குமாரின் மறைவிற்கு அஞ்சலி தெரிவித்துள்ளார். அவரது குடும்பத்தினர் மற்றும் ரசிகர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள அவர், இந்திய சினிமாவில் திலீப்குமாரின் அதிகப்படியான பங்களிப்பு பல தலைமுறைகளுக்கு நினைவில் வைக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.