Don't Miss!
- Automobiles மைலேஜில் டூவீலர்களே ஒரு அடி பின்னாலதான் நிக்கணும்! புது அவதாரம் எடுக்கிறது மாருதி ஸ்விஃப்ட்! புக்கிங் தொடக்கம்
- Lifestyle ராம நவமி நாளில் நிகழும் அரிய நிகழ்வு: இந்த 3 ராசிக்காரங்க ராமரின் அருளால் பண மழையில் நனையப்போறாங்க..
- Education யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் ரிலீஸ்..லக்னோ இளைஞர் ஆதித்யா ஸ்ரீவஸ்தவா முதலிடம்
- News இந்து சமய அறநிலையத் துறை அதிகாரியுடன் 24 நாட்கள் உல்லாசம்.. நிர்மலா தேவி வழக்கில் ஏப்.26ல் தீர்ப்பு
- Sports என்ன விட்டுருங்க சாமி! ஆர்சிபி அணியிலிருந்து ஓடிய அதிரடி வீரர்.. தத்தளிக்கும் கோலி, டுபிளசிஸ்
- Technology விஸ்வரூப பட்ஜெட்.. ரூ.12999 போதும்.. OIS கேமரா.. 6000mAh பேட்டரி.. 1TB மெமரி.. 30W சார்ஜிங்.. எந்த மாடல்?
- Finance ஈஸியா ரூ.5 லட்சம் உங்களை தேடி வரும்.. மத்திய அரசின் சூப்பரா திட்டம்.. அதுவும் அந்த சலுகை செம!
- Travel இந்தியாவில் உள்ள பழத் தலைநகரங்கள் பற்றி தெரியுமா – மாம்பழ, வாழைப்பழ, கொய்யா தலைநகரங்கள்!
'இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்..!' - காவியக் கவிஞர் வாலி நினைவலைகள்! #Vaali
சென்னை : காவியக் கவிஞர் வாலியின் பிறந்ததினம் இன்று. அவரது கைப்பட்டு வார்த்தைகள் வண்ண வானவில்லாகியிருக்கின்றன; வரிகள் அழகான அந்தி வானமாயிருக்கின்றன.
கவிஞர் வாலி தமிழ் சினிமாவுக்குக் கிடைத்த வரம். அவரது வரிகளில் உருவான பாடல்கள் எட்டுத்திக்கும் இசைக்கப் பட்டிருக்கின்றன. பலரது வாழ்வை ரசனைமிகச் செய்திருக்கின்றன. அவரது உவமைக்கும், வர்ணனைக்கும் பலகோடி ரசிகர்கள்.
வாலியின் மறைவு தமிழ் சினிமாவுக்கும், ரசிகர்களுக்கும் பேரிழப்பு. வாலியின் பிறந்தநாளன்று அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்திருக்கும் நினைவலைகளுல் சில இங்கே...
|
வர்ணனைக் கவி!
என்ன ஒரு வர்ணனை! காவியக் கவிஞர் வாலி பிறந்த நாள் #HBDVaali
|
பாடல் வரி
மண்குடிசை வாசல் என்றால் தென்றல் வர வெறுத்திடுமா? மாலைநிலா ஏழையென்றால் வெளிச்சம் தர மறுத்திடுமா?
|
மரணப் படுக்கையிலும்
மரணப்படுக்கையில் #வாலி.. பேச இயலவில்லை..! மருத்துவர் #நரசிம்மன் ஒரு காகிதத்தை கொடுத்து, "சொல்ல விரும்புவதை எழுதிக்காட்டுங்கள்" என்றார்.. "சுவாசம், மிகமோசம்.. அந்த #நரசிம்மனால் (கடவுள்/மருத்துவர்) கூட என்னை காக்க இயலாதா..?" என்றாராம். #இயல்பு_மாறாது #புகழஞ்சலி
|
அன்புக்கடல் ஆழம் யாரும்...
வங்க கடல் ஆழமென்ன வல்லவர்கள் கண்டதுண்டு... அன்புக்கடல் ஆழம் யாரும் கண்டதில்லையே... காவிய கவி தந்த "கவிஞர் வாலி" பிறந்த தினம் இன்று!
|
மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்
திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம்... வருந்தாத உருவங்கள் பிறந்தென்ன லாபம்... இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்..! #HBDvaali
|
தகுமா
நிலவிடம் வாடகை வாங்கி... விழி வீட்டினில் குடி வைக்கலாமா... நாம் வாழும் வீட்டிக்குள் வேறாரும் வந்தாலே தகுமா? #வாலி இனிய பிறந்தநாள் கவிஞர் வாலி
வாலி கவிதை
கும்பகோணம் குழந்தைகள் தீவிபத்தின்போது #வாலி எழுதிய கவிதை..!
"நிறைய கோயில்கள் கொண்ட ஊராமே குடந்தை..!
அப்படியானால் இந்த அக்கிரமத்துக்கு அத்துணை தெய்வங்களுமா உடந்தை!"
காலம் தாண்டிய கவிஞர்
"மன்னவனே அழலாமா"வும் இவர்தான்; "நான் ஆணையிட்டால்"ம் இவர்தான்; "முக்காலா முக்காபுலா"வும் இவர்தான்; "மின்வெட்டு நாளில் இங்கே"யும் இவர்தான். #வாலி