Don't Miss!
- News விடிவுகாலம்.. தேர்தல் முடிந்ததும் சென்னையின் முக்கிய பகுதி அடியோடு மாறுகிறது.. பிரம்மாண்ட பாலம் ரெடி
- Finance வாடகை ஒப்பந்தங்கள் ஏன் 11 மாதங்களுக்கு மட்டுமே போடப்படுகிறது தெரியுமா?
- Automobiles ஒவ்வொருத்தர் வீட்டிலும் அடுத்த சில மாதங்களில் நிற்க போகும் கார்!! மாருதி ஷோரூம்ஸ் நிரம்பி வழியும்!
- Sports விராட் கோலி ரன்கள் அடித்தால் போதாது.. ஆர்சிபி அணியின் ரியல் எமன் யார் தெரியுமா? டூ பிளசிஸ் ஓபன் டாக்
- Lifestyle எப்பவும் வெறும் தோசை சுடுறதுக்கு பதிலா, ஒருமுறை நெல்லூர் கார தோசையை ட்ரை பண்ணுங்க...
- Technology இனி Signal Weak சிக்கலே இருக்காது.. மொபைல் Settings-ல இதை பண்ணா போதும்.. இன்டர்நெட் ஸ்பீட் சும்மா பிச்சிக்கும்
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
வாலியின் மரணம்... திரையுலகின் பிரார்த்தனை வீணானது!
அவர் நலமடைந்து வந்து மீண்டும் பாடல்களை புனைய வேண்டும் என தமிழ் திரையுலகமே பிரார்த்தித்து வந்தது. இப்போது அத்தனை பேரும் வாலியின் மறைவால் துயருற்று நிற்கின்றனர்.
82 வயது வாலி, கடந்த ஒரு மாதத்துக்கும் மேல் உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தார். அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கவிஞர் வாலியின் உடல்நிலை மோசம் அடைந்ததையடுத்து, அவருக்கு வென்டிலேட்டர் கருவி பொருத்தப்பட்டது.
சமீபத்தில் நடிகர் கமல், இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் உள்ளிட்டோர் நேரில் போய் வாலியைப் பார்த்துவிட்டு வந்தனர். ஆனால் அவரால் வந்திருந்தவர்களை அடையாளம் காண முடியாத நிலை.
வாலியின் உடல் நலமடைய வேண்டி தமிழ் திரையுலகமே பிரார்த்தனை செய்து வந்தது. ஆனால் நூற்றாண்டைக் கொண்டாடும் இந்திய சினிமாவில் நூறாண்டு வாழ்ந்து கலைச் சேவை செய்ய வேண்டும் என்ற அத்தனை பேரின் எதிர்பார்ப்பையும் ஏமாற்றி விட்டு பிரியா விடை பெற்று விட்டார் வாலி.