Don't Miss!
- News உங்கள் தொகுதி வேட்பாளர்களின் சொத்துக்கள், கடன்கள், குற்ற வழக்குகளை பற்றி முழுமையாக எப்படி அறிவது?
- Sports "3 வருடத்தில் ஐபிஎல் தொடரே இருக்காது".. ஆனால் நடந்தது இதுதான்.. அஸ்வின் அதிரடி
- Lifestyle 150 ஆண்டுகளுக்கு முன்னாடியே இந்தியாவின் முதல் செல்பியை தனது மனைவியுடன் எடுத்தது இந்த ராஜாதானாம்..போட்டோ உள்ளே!
- Finance கௌதம் அதானி கையில் பணம் விளையாடுது.. ரூ.6,661 கோடி புதிய முதலீடு..!!
- Automobiles இந்தியாவே இந்த ஸ்கோடா காருக்காக தான் வெயிட்டிங்! விலையை கேட்டா ஆச்சரியப்படுவீங்க!
- Technology வாவ்.. சும்மா அள்ளுது.. 6000எம்ஏஎச் பேட்டரி.. 50எம்பி கேமரா.. 128ஜிபி மெமரி.. எந்த மாடல்?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
வாலியின் மரணம்... திரையுலகின் பிரார்த்தனை வீணானது!
அவர் நலமடைந்து வந்து மீண்டும் பாடல்களை புனைய வேண்டும் என தமிழ் திரையுலகமே பிரார்த்தித்து வந்தது. இப்போது அத்தனை பேரும் வாலியின் மறைவால் துயருற்று நிற்கின்றனர்.
82 வயது வாலி, கடந்த ஒரு மாதத்துக்கும் மேல் உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தார். அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கவிஞர் வாலியின் உடல்நிலை மோசம் அடைந்ததையடுத்து, அவருக்கு வென்டிலேட்டர் கருவி பொருத்தப்பட்டது.
சமீபத்தில் நடிகர் கமல், இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் உள்ளிட்டோர் நேரில் போய் வாலியைப் பார்த்துவிட்டு வந்தனர். ஆனால் அவரால் வந்திருந்தவர்களை அடையாளம் காண முடியாத நிலை.
வாலியின் உடல் நலமடைய வேண்டி தமிழ் திரையுலகமே பிரார்த்தனை செய்து வந்தது. ஆனால் நூற்றாண்டைக் கொண்டாடும் இந்திய சினிமாவில் நூறாண்டு வாழ்ந்து கலைச் சேவை செய்ய வேண்டும் என்ற அத்தனை பேரின் எதிர்பார்ப்பையும் ஏமாற்றி விட்டு பிரியா விடை பெற்று விட்டார் வாலி.