Don't Miss!
- News நிர்மலா கிட்ட காசு இல்லை.. அப்ப தமிழிசையிடம் பணமிருக்கா? நிதியமைச்சர் மீது பாய்ச்சல்? யார்னு பாருங்க
- Sports சின்னவனை மீண்டும் சேர்க்காத டெல்லி.. குட்டி சச்சினுக்கு என்ன ஆச்சு? அதிர்ச்சி கொடுத்த ரிஷப் பண்ட்!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Lifestyle முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Automobiles தேர்தல் வர நேரத்துல பிரம்மாஸ்திரத்தை கையில எடுத்துட்டாங்க! சுங்கசாவடிகளை தூக்க முடிவு பண்ணிட்டாங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
எங்கிருந்தாலும் வாழ்க பாடல் அணிந்திருந்த ஆபரணமே அதன் சோகம்தான்.. ஏஎல் ராகவனுக்காக உருகிய வைரமுத்து!
சென்னை: பாடகர் ஏஎல் ராகவன் மறைவுக்கு கவிஞர் வைரமுத்து இரங்கல் தெரிவித்துள்ளார்.
பாடகர், தயாரிப்பாளர், நடிகர் என பல முகங்களை கொண்டவர் ஏஎல் ராகவன். நெஞ்சில் ஓர் ஆலையம் படத்தில் இவர் பாடிய எங்கிருந்தாலும் வாழ்க.. பாடல் பட்டிதொட்டியெங்கும் பிரபலம்.
ஏராளமான பாடல்களை பாடியுள்ள ஏஎல் ராகவன், பழம் பெரும் நடிகையான எம்என் ராஜத்தை காதல் திருமணம் செய்துக்கொண்டார். ஏஎல் ராகவன் சென்னை ராயப்பேட்டையில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.
இந்நிலையில் இன்று காலை ஏஎல் ராகவனுக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து சென்னை ராமச்சந்திரா மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார் ஏஎல் ராகவன். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிந்தார் அவருக்கு வயது 87.
உலகம் ஒருகணம் நிறமிழந்துபோனதாய் நெஞ்சுடைகிறேன்.. ஒளிப்பதிவாளர் கண்ணன் மறைவு.. வைரமுத்து உருக்கம்!
ஏஎல் ராகவனின் மறைவு திரைத்துறையினர் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திரைத்துறை பிரபலங்கள் பலரும் ஏஎல் ராகவனின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் கவிஞர் வைரமுத்து, அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில், ஏ.எல்.ராகவன்
ஒரு தலைமுறையைத்
தடவிப்போன மயிலிறகு.
எங்கிருந்தாலும் வாழ்க பாடல்
அணிந்திருந்த ஆபரணமே
அதன் சோகம்தான்;
அணிவித்தது அவர் குரல்தான்.
மனைவியார் எம்.என்.ராஜம்,
குடும்பத்தார், கலையுலகத்தார்
அனைவர்க்கும் ஆழ்ந்த இரங்கல்... என பதிவிட்டுள்ளார்.