Don't Miss!
- Automobiles பிரசார வேனை சொகுசு பங்களா போல செட்டப் செய்த கமலஹாசன்! இதை பார்க்கவே கூட்டம் குவியுமே!
- Sports அஸ்வின் நீங்க செஞ்சது பெரிய தப்பு.. உங்க தவறை மறைக்க ஜெய்ஸ்வாலை திட்டுவதா? என்ன நடந்தது?
- News திருச்சி நபர் உள்பட 3 பேர் பலி! சென்னையை அதிரவைத்த கேளிக்கை விடுதி விபத்து! நடந்தது என்ன? பரபர தகவல்
- Lifestyle உங்க சிறுநீரகம் பாதுகாப்பா இருக்கணுமா? நிபுணர்கள் சொல்லும் இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் சாப்பிடுங்க...!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
உலகம் ஒருகணம் நிறமிழந்துபோனதாய் நெஞ்சுடைகிறேன்.. ஒளிப்பதிவாளர் கண்ணன் மறைவு.. வைரமுத்து உருக்கம்!
சென்னை: பிரபல ஒளிப்பதிவாளர் கண்ணன் மறைவுக்கு கவிஞர் வைரமுத்து அதிர்ச்சியையும் இரங்கலையும் தெரிவித்துள்ளார்.
பிரபல ஒளிப்பதிவாளரான பி கண்ணன் சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் இதய நோய்க்கு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று பிற்பகல் சிகிச்சைப் பலனின்றி மருத்துவமனையில் அவர் உயிர் பிரிந்தது.
மறைந்த ஒளிப்பதிவாளர் கண்ணன், பிரபல இயக்குநர் பீம் சிங்கின் மகன் ஆவார். பிரபல எடிட்டரான பி லெனின் சகோதரராவார். மறைந்த ஒளிப்பதிவாளர் கண்ணன், இயக்குநர் பாரதிராஜாவின் கண்கள் என்றழைக்கப்பட்டவர்.
பாரதிராஜாவின் நிழல்கள் முதல் அவரது பெரும்பாலான படங்களுக்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார். தமிழில் 50 படங்களுக்கு மேல் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார் பி கண்ணன். அவற்றில் 40 படங்கள் இயக்குநர் பாரதிராஜாவினுடையது என்பது குறிப்பிடத்தக்கது.
பாரதிராஜாவின் ஆஸ்தான கேமராமேன்.. பிரபல ஒளிப்பதிவாளர் பி.கண்ணன் காலமானார்.. திரையுலகம் அதிர்ச்சி!
அவரது திடீர் மறைவு திரைத்துறையினர் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திரைத்துறையை சேர்ந்த பிரபலங்கள் பலரும் பி. கண்ணனின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் ஒளிப்பதிவாளர் கண்ணனின் மறைவுக்கு கவிஞர் வைரமுத்து இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில்,
பாரதிராஜாவின் மனக்கண்ணாகவும்
கலைக் கண்ணாகவும் விளங்கியவர் பி.கண்ணன்.
என் முதல் பாடலான
பொன்மாலைப்பொழுதுக்குத் தங்கம் பூசியவர்.
தேசியவிருது பெற்ற என் 7பாடல்களில்
2பாடல்களை ஒளிபெயர்த்தவர்.
குணவான் ஆகிய கனவான்.
அவர் மறைவால் இந்த உலகம் ஒருகணம்
நிறமிழந்துபோனதாய் நெஞ்சுடைகிறேன்.. என உருக்கமாக தெரிவித்துள்ளார்.
-
Vijay - புஸ்ஸி ஆனந்த்துடன் விஜய் சகவாசம்.. ஒரு அரசியல்வாதியும் இப்படி செய்யல.. கிழித்து தொங்கவிட்ட எஸ்.ஏ.சி
-
என்னது விஜய்யின் கடைசி படத்தை இயக்கப்போவது இவரா?.. தரமான சம்பவமா இருக்குமோ?.. அப்போ அவங்க நிலைமை
-
ஒரே தேதியில் இரண்டு இழப்புகள்.. சந்தானத்துக்கு உச்சக்கட்ட வேதனை.. ரசிகர்கள் ஆறுதல்