Don't Miss!
- Technology நீ படிச்ச ஸ்கூல்ல நான் ஹெட் மாஸ்டர் டா.. ChatGPT-க்கு செக் வச்ச Google.. இனி மொபைல் யூசர்கள் Gemini பக்கம்!
- Automobiles கியா களமிறக்கும் புது எலெக்ட்ரிக் காரின் விலை இவ்ளோதானா! பெட்டி கடைல கடலை மிட்டாய் விக்கற மாதிரி விக்க போகுது!
- News ‛‛முகத்தில் மாஸ்க்’’.. அடையாளத்தை மறைத்து நீதிமன்றத்தில் ஆஜரான நடிகை யாஷிகா ஆனந்த்.. என்ன மேட்டர்?
- Lifestyle உங்கள் கால் நகங்களை அழகாக மாற்ற அற்புதமான டிப்ஸ்..
- Finance இனி பீட்சா முதல் பெப்சி வரை இவர்கள் கையில் தான்..!! வாரிசு கைக்கு மாறும் ஆர் ஜே கார்ப்பரேஷன்..!
- Sports சிஎஸ்கே அணிக்கு சிக்கல்.. பிளே-ஆஃப் வாய்ப்புக்கு ஆப்பு வைத்த 2 அணிகள்.. இனி என்ன செய்ய வேண்டும்?
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
உலகம் ஒருகணம் நிறமிழந்துபோனதாய் நெஞ்சுடைகிறேன்.. ஒளிப்பதிவாளர் கண்ணன் மறைவு.. வைரமுத்து உருக்கம்!
சென்னை: பிரபல ஒளிப்பதிவாளர் கண்ணன் மறைவுக்கு கவிஞர் வைரமுத்து அதிர்ச்சியையும் இரங்கலையும் தெரிவித்துள்ளார்.
பிரபல ஒளிப்பதிவாளரான பி கண்ணன் சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் இதய நோய்க்கு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று பிற்பகல் சிகிச்சைப் பலனின்றி மருத்துவமனையில் அவர் உயிர் பிரிந்தது.
மறைந்த ஒளிப்பதிவாளர் கண்ணன், பிரபல இயக்குநர் பீம் சிங்கின் மகன் ஆவார். பிரபல எடிட்டரான பி லெனின் சகோதரராவார். மறைந்த ஒளிப்பதிவாளர் கண்ணன், இயக்குநர் பாரதிராஜாவின் கண்கள் என்றழைக்கப்பட்டவர்.
பாரதிராஜாவின் நிழல்கள் முதல் அவரது பெரும்பாலான படங்களுக்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார். தமிழில் 50 படங்களுக்கு மேல் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார் பி கண்ணன். அவற்றில் 40 படங்கள் இயக்குநர் பாரதிராஜாவினுடையது என்பது குறிப்பிடத்தக்கது.
பாரதிராஜாவின் ஆஸ்தான கேமராமேன்.. பிரபல ஒளிப்பதிவாளர் பி.கண்ணன் காலமானார்.. திரையுலகம் அதிர்ச்சி!
அவரது திடீர் மறைவு திரைத்துறையினர் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திரைத்துறையை சேர்ந்த பிரபலங்கள் பலரும் பி. கண்ணனின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் ஒளிப்பதிவாளர் கண்ணனின் மறைவுக்கு கவிஞர் வைரமுத்து இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில்,
பாரதிராஜாவின் மனக்கண்ணாகவும்
கலைக் கண்ணாகவும் விளங்கியவர் பி.கண்ணன்.
என் முதல் பாடலான
பொன்மாலைப்பொழுதுக்குத் தங்கம் பூசியவர்.
தேசியவிருது பெற்ற என் 7பாடல்களில்
2பாடல்களை ஒளிபெயர்த்தவர்.
குணவான் ஆகிய கனவான்.
அவர் மறைவால் இந்த உலகம் ஒருகணம்
நிறமிழந்துபோனதாய் நெஞ்சுடைகிறேன்.. என உருக்கமாக தெரிவித்துள்ளார்.