Don't Miss!
- Finance திருமணமான இந்துக்கள் கூடுதலாக வரி சேமிப்பதற்கான வழிமுறைகள் – ஜெரோதா CEO சொன்ன ஐடியா..!
- Automobiles அந்த தப்பை மட்டும் பண்ணிடாதீங்க.. ஆடி, பென்ஸ், போர்ஷேனு எல்லா காரையும் வாரி சுருட்டி போட்டு போயிட்டாங்க போலீஸ்
- Lifestyle Today Rasi Palan 29 March 2024: இன்று இந்த ராசிக்காரர்களின் நிதி நிலை வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும்...
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
மீன்கள்தான் உண்பதற்கு... மீனவர்கள் அல்ல! - கவிஞர் வைரமுத்து கண்டனம்
சென்னை: தமிழக மீனவர் பிரிட்ஜோ இலங்கை கடற்படையினரால் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார் கவிஞர் வைரமுத்து.
தமிழக மீனவர் பிரிட்ஜோ, இலங்கை கடல் எல்லைக்குள் நுழைந்துவிட்டதாகக் கூறி இலங்கை கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் வழக்கம்போல மத்திய அரசும், வழக்கத்துக்கு மாறாக தமிழக அரசும் மவுனம் சாதிக்கின்றன. இலங்கையைக் கண்டித்து ஒப்புக்குக் கூட ஒரு அறிக்கை விடவில்லை.
இந்த நிலையில், தமிழகத்தில் உள்ள பல தலைவர்கள், முக்கியப் பிரமுகர்கள் இலங்கையின் இந்த மனிதாபிமானமற்ற செயலைக் கண்டித்து வருகின்றனர்.
கவிஞர் வைரமுத்து தனது கண்டன அறிக்கையில், "தமிழக மீனவர் சுட்டுக் கொல்லப்பட்டதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
கடந்த 30 ஆண்டுகளில் 730 தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது. மத்திய அரசு இனிமேலாவது தன் மெளனத்தைக் கலைத்துக்கொள்ள வேண்டும். இதுவே கடைசி மரணமாக இருக்கட்டும். மீன்கள்தான் உண்பதற்கு; மீனவர்கள் அல்லர்," என்று கூறியுள்ளார்..