Don't Miss!
- News "முட்டாள்தனமா இருக்கே.." ரகுராம் ராஜன் சொன்ன பரபர கருத்து.. எல்லா பக்கமும் கிளம்பிய எதிர்ப்பு
- Lifestyle முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Automobiles தேர்தல் வர நேரத்துல பிரம்மாஸ்திரத்தை கையில எடுத்துட்டாங்க! சுங்கசாவடிகளை தூக்க முடிவு பண்ணிட்டாங்க!
- Sports ஆர்சிபி வேண்டாம் என ஒதுக்கிய 3 வீரர்கள்.. ஐபிஎல் 2024 சீசனில் பட்டையை கிளப்பும் அதிசயம்
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
'புலி'யால் வந்த சிக்கல்... போக்கிரி ராஜா வெளியாவதில் இழுபறி!
விஜய்யின் புலி படத்தின் தோல்வியால் வந்த நஷ்டம், இப்போது அதன் தயாரிப்பாளர்களின் அடுத்த படத்தின் கழுத்தை இறுக்க ஆரம்பித்துள்ளது.
புலி படத்தை பிடி செல்வகுமாரும், ஷிபு தமீன்ஸூம் தயாரித்து வெளியிட்டனர். மிகுந்த எதிர்ப்பார்ப்புக்கிடையே வெளியான அந்தப் படம் பெரும் தோல்வியைத் தழுவியது. முதல் முறையாக இதனை வெளிப்படையாக ஒப்புக் கொண்டு அறிக்கையும் வெளியிட்டனர் தயாரிப்பாளர்கள்.
புலி படத்துக்குப் பிறகு அதன் தயாரிப்பாளர்கள் ஜீவாவை வைத்து போக்கிரி ராஜாவை எடுத்து வருகின்றனர். இதன் படப்பிடிப்பு முடிந்து ரிலீஸ் தேதியும் முடிவு செய்யப்பட்ட நிலையில், படத்துக்கு விநியோகஸ்தர்கள் தரப்பில் முட்டுக்கட்டை விழுந்துள்ளதாம்.
புலியின் நஷ்டத்தை ஈடு செய்யாமல் போக்கிரி ராஜாவை வெளியிடக் கூடாது என்பதுதான் அந்த முட்டுக் கட்டை. எனவே தயாரிப்புத் தரப்பு என்னதான் வெளியீட்டுத் தேதியை அறிவித்தாலும், அந்தத் தேதியில் போக்கிரி ராஜா வெளியாகுமா என்பது சந்தேகம்தான் என்கிறார்கள் பாக்ஸ் ஆபீஸில்.