Don't Miss!
- Sports LSG vs CSK : தோனி மாதிரி இல்லப்பா.. ரசிகர்கள் பேச்சை கேட்ட ருதுராஜ்.. சிஎஸ்கே அணியில் 2 மாற்றங்கள்!
- News ஓயாத மணிப்பூர் கலவரம்.. பூத்களை கைப்பற்ற முயற்சி? மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டால் பதற்றம்
- Technology கெத்தா வெளிவரும் Vivo V30e 5G.. வெல்வெட் ரெட் லுக்கில் தருமாறு அம்சங்கள்.. விலை என்ன இருக்கும்?
- Finance துபாயில் இருக்கும் இந்தியர்களே.. முதல்ல இதை படிங்க..!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Lifestyle தினமும் எவ்வளவு சர்க்கரை உட்கொள்வது பாதுகாப்பானது தெரியுமா? இத்தனை ஸ்பூனுக்கு மேல தெரியாம கூட சாப்பிடாதீங்க...
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
- Automobiles ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
50 ரசிகர்களின் கருத்தைக் கேட்டு படத்தை "ஷேப்" செய்த "போக்கிரிராஜா" டீம்!
சென்னை: ஜீவா, சிபிராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் போக்கிரி ராஜா திரைப்படத்தை, ரசிகர்கள் 50 பேருக்கு படக்குழு திரையிட்டுக் காட்டியுள்ளது.
சமீப காலமாக ரசிகர்களின் ரசனை வேகமாக மாறிவருகிறது. பிடித்த படத்தை ஆதரிக்கும் ரசிகர்கள் தங்களின் அபிமான நடிகரின் படமென்றாலும் கூட படம் கவரவில்லை எனில் வறுத்தெடுத்து விடுகிறார்கள்.
சமூக வலைதளங்களின் பயன்பாட்டால் படத்திற்கு கிடைக்கும் நன்மை ஒருபுறமெனில், அதே சமூக வலைதளங்கள் சில படங்களின் வீழ்ச்சிக்கும் காரணமாகி விடுவதை மறுப்பதற்கில்லை.
இதனைக் கருத்தில் கொண்டு போக்கிரி ராஜா படக்குழு ஒரு வித்தியாசமான வேலையைச் செய்திருக்கிறது. அதாவது சுமார் 50 ரசிகர்களை தேர்வு செய்த படக்குழுவினர் அவர்களுக்கு இந்தப் படத்தை போட்டுக் காட்டியிருக்கின்றனர்.
பின்னர் அவர்களின் கருத்தைக் கேட்டு போக்கிரி ராஜாவில் சில திருத்தங்களை செய்துள்ளனராம். இந்தத் தகவலை படத்தின் இயக்குநர் ராம்பிரகாஷ் ராயப்பா படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் தெரிவித்திருக்கிறார்.
ஏற்கனவே புலி படத்தால் போக்கிரி ராஜாவிற்கு ஏற்பட்ட சிக்கலை மனதில் கொண்டு,இப்படத்தை வருகின்ற மார்ச் 4 ம் தேதி, விஜய் ஆண்டனியின் பிச்சைக்காரன் படத்துடன் வெளியிட படக்குழு முடிவு செய்திருக்கிறது.
டி.இமான் இசையமைப்பில் உருவாகியிருக்கும் போக்கிரி ராஜா நடிகர் ஜீவாவின் 25 வது படமாக வெளியாவது குறிப்பிடத்தக்கது.