Don't Miss!
- Finance Youtubeஇல் 1 லட்சம் சப்ஸ்கிரைபர்ஸ் இருந்தா இவ்ளோ வருமானம் கிடைக்குமா? கிரியேட்டர்ஸுக்கு வாழ்வு தான்..
- News "ஓபிஎஸ் எதிராக பல OPSகள்!" நொடியும் யோசிக்காமல் எடப்பாடி தந்த பதில்! என்ன இப்படி சொல்லிட்டாரு
- Automobiles கார் வாங்குவதிலும் ஆணுக்கு இணையாக பெண்கள்!! புள்ளி விபரம் என்ன சொல்லுது? எந்த ஊரில் அதிகம்?
- Sports வீடியோ- கட்டி பிடிக்க வந்த மலிங்கா.. தள்ளி விட்ட ஹர்திக் பாண்டியா..மும்பை அணியில் என்ன தான் நடக்குது
- Technology ஏர்டெல் காலி.. மாதாந்திரம் ரூ.141 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. 5ஜி டேட்டா.. அன்லிமிட் வாய்ஸ் கால்கள்!
- Lifestyle இந்த 4 பொருள் இருந்தா போதும்.. 1 நிமிடத்தில் சட்னியை செஞ்சுடலாம்.. எப்படி-ன்னு பாருங்க...
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
50 ரசிகர்களின் கருத்தைக் கேட்டு படத்தை "ஷேப்" செய்த "போக்கிரிராஜா" டீம்!
சென்னை: ஜீவா, சிபிராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் போக்கிரி ராஜா திரைப்படத்தை, ரசிகர்கள் 50 பேருக்கு படக்குழு திரையிட்டுக் காட்டியுள்ளது.
சமீப காலமாக ரசிகர்களின் ரசனை வேகமாக மாறிவருகிறது. பிடித்த படத்தை ஆதரிக்கும் ரசிகர்கள் தங்களின் அபிமான நடிகரின் படமென்றாலும் கூட படம் கவரவில்லை எனில் வறுத்தெடுத்து விடுகிறார்கள்.
சமூக வலைதளங்களின் பயன்பாட்டால் படத்திற்கு கிடைக்கும் நன்மை ஒருபுறமெனில், அதே சமூக வலைதளங்கள் சில படங்களின் வீழ்ச்சிக்கும் காரணமாகி விடுவதை மறுப்பதற்கில்லை.
இதனைக் கருத்தில் கொண்டு போக்கிரி ராஜா படக்குழு ஒரு வித்தியாசமான வேலையைச் செய்திருக்கிறது. அதாவது சுமார் 50 ரசிகர்களை தேர்வு செய்த படக்குழுவினர் அவர்களுக்கு இந்தப் படத்தை போட்டுக் காட்டியிருக்கின்றனர்.
பின்னர் அவர்களின் கருத்தைக் கேட்டு போக்கிரி ராஜாவில் சில திருத்தங்களை செய்துள்ளனராம். இந்தத் தகவலை படத்தின் இயக்குநர் ராம்பிரகாஷ் ராயப்பா படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் தெரிவித்திருக்கிறார்.
ஏற்கனவே புலி படத்தால் போக்கிரி ராஜாவிற்கு ஏற்பட்ட சிக்கலை மனதில் கொண்டு,இப்படத்தை வருகின்ற மார்ச் 4 ம் தேதி, விஜய் ஆண்டனியின் பிச்சைக்காரன் படத்துடன் வெளியிட படக்குழு முடிவு செய்திருக்கிறது.
டி.இமான் இசையமைப்பில் உருவாகியிருக்கும் போக்கிரி ராஜா நடிகர் ஜீவாவின் 25 வது படமாக வெளியாவது குறிப்பிடத்தக்கது.