Don't Miss!
- Sports இனி வீட்டுல தான் உட்காரணும்.. ஐபிஎல் டீமை நம்பி ஏமாந்த ஸ்ரேயாஸ் ஐயர்.. சோலியை முடித்த பிசிசிஐ
- News பாஜக கூட்டணியில் பாமக போட்டியிடும் 10 தொகுதிகள் எது? சேலத்தில் இவரா? உத்தேச வேட்பாளர்கள் லிஸ்ட் ?
- Finance H-1B விசா: ஐடி ஊழியர்களுக்கு 3 நாளில் குட் நியூஸ்.. பல பேரின் வாழ்க்கை மாறப்போகுது..!!
- Education கல்வித்தரத்தில் சமரசம் செய்துகொள்ள எம்ஓபி வைஷ்ணவ் மகளிர் கல்லூரி
- Technology ஆதார் அப்டேட் செய்ய போறீங்களா? தெரியாம கூட இந்த தவறை செய்யாதீர்கள்.. கணக்கு வைக்கும் UIDAI ஆணையம்..
- Automobiles கேரளாவில் தவெக தலைவர் விஜய்யை பார்க்க இவ்வளவு கூட்டமா? கேரளாவுல நின்னா வெற்றி கன்ஃபார்ம்!
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் நிகழும் ராகு சூரிய சுக்கிர சேர்க்கை: மார்ச் 31 முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்..
- Travel தமிழ்நாட்டின் அரண்மனை கிராமம் இது தான் – தமிழர்கள் ஒவ்வொருவரும் கட்டாயம் பார்க்க வேண்டியம் இடம்!
நேற்றைய ஐபிஎல் போட்டியில் போலீசார் அனுமதித்த கருப்பு சட்டை இவர் மட்டும் தான்
Recommended Video
சென்னை: நேற்றைய ஐபிஎல் போட்டியின்போது கருப்பு சட்டை அணிய அனுமதி இல்லாதபோதும் ஒரேயொருவர் மட்டும் கருப்பு சட்டையில் வந்திருந்தார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி தமிழகத்தில் தொடர் போராட்டம் நடந்து வருகிறது. இந்த பிரச்சனைக்கு இடையே சென்னையில் ஐபிஎல் போட்டிகளை நடத்தக் கூடாது என்று போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.
அதையும் மீறி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள ஸ்டேடியத்தில் நேற்று ஐபிஎல் போட்டி நடந்தது.
சேப்பாக்கம்
போட்டி துவங்குவதற்கு முன்பு அண்ணா சாலை, சேப்பாக்கம் பகுதி போராட்டக்களமாக மாறியது. போராட்டக்காரர்கள் மீது போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர்.
கொடி
போட்டி நடந்த அரங்கிற்குள் கருப்பு சட்டை அணிந்து செல்ல யாருக்கும் அனுமதி அளிக்கவில்லை. கமாண்டோக்கள் கூட பச்சை நிற உடை தான் அணிந்திருந்தனர். கருப்புக் கொடி எடுத்துச் செல்லவும் தடை செய்யப்பட்டது.
|
கருப்பு
நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் ஷாருக்கானின் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மோதியது. ஆட்டத்தை பார்க்க வந்த ஷாருக்கான் கருப்பு நிற டி சர்ட் அணிந்திருந்தார். அரங்கில் அவர் மட்டும் தான் கருப்பு நிற சட்டை அணிந்திருந்தார்.
|
டோணி
பார்வையாளர் பகுதியில் அமர்ந்திருந்த சிஎஸ்கே கேப்டன் டோணியின் மனைவி சாக்ஷி, மகள் ஜிவா ஆகியோருடன் புகைப்படம் எடுத்தார் ஷாருக்கான். ஷாருக்கான் தனது மகள் சுஹானாவை அழைத்து வருவார் என்று எதிர்பார்த்த ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.