Don't Miss!
- News பிறந்ததேதி இடிக்குதே! எடப்பாடியை விட சசிகலா பெரியவரா? உதயநிதிக்கு பதில் கூறிய ஈபிஎஸ்க்கு புது தலைவலி
- Finance புதிய துறையில் அடியெடுத்து வைத்த கௌதம் அதானி.. இதுவும் குஜராத்துக்கு தான்..!!
- Sports அவங்க 2 பேசிட்டு இருந்தாங்க.. நான் குடுகுடுனு நடந்து வந்துட்டேன்.. அஸ்வினால் ஷாக்கான ராஜஸ்தான் அணி!
- Lifestyle 150 ஆண்டுகளுக்கு முன்னாடியே இந்தியாவின் முதல் செல்பியை தனது மனைவியுடன் எடுத்தது இந்த ராஜாதானாம்..போட்டோ உள்ளே!
- Automobiles இந்தியாவே இந்த ஸ்கோடா காருக்காக தான் வெயிட்டிங்! விலையை கேட்டா ஆச்சரியப்படுவீங்க!
- Technology வாவ்.. சும்மா அள்ளுது.. 6000எம்ஏஎச் பேட்டரி.. 50எம்பி கேமரா.. 128ஜிபி மெமரி.. எந்த மாடல்?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
கோவையில் தெறி படத்தை திருட்டுத்தனமாக தியேட்டரில் பதிவு செய்த சேனல் ஊழியர்கள் கைது!
கோவை: இன்று வெளியான விஜய்யின் தெறி படத்தை திருட்டுத்தனமாக பதிவு செய்ய முயன்ற சேனல் ஊழியர்கள் மற்றும் தியேட்டர் நிர்வாகிகளை போலீசார் கைது செய்துள்ளனர்.
தெறி படம் இன்று பிரமாண்டமாக வெளியாகியுள்ளது. ஆனால் தமிழகத்தில் மட்டும் சில அரங்குகள் படத்தை வெளியிட மறுத்துவிட்டன. டிக்கெட் விலை மற்றும் படத்துக்கு வைக்கப்பட்ட விலையை அவர்கள் ஏற்கவில்லை.
இந்த நிலையில் கோவையில் உள்ள சாந்தி (விநியோகஸ்தர் திருப்பூர் சுப்பிரமணியத்துக்கு சொந்தமானது) தியேட்டரில் காலை 8 மணிக்கு ஆரம்பிக்கப்பட்ட சிறப்புக் காட்சியில், படத்தின் அரை மணி நேரக் காட்சிகளை ஒரு தனியார் சேனல் மூலம் திருட்டுத்தனமாக பதிவு செய்ததாகக் கூறப்படுகிறது.
இந்த தகவல் அறிந்த மோனிகா பிலிம்ஸ் செந்தில், தகவலை போலீசாருக்குத் தெரிவித்தார். உடனடியாக போலீசார் தியேட்டருக்கு விரைந்து வந்து தெறி படத்தை வீடியோவில் பதிவு செய்த நபர்களைப் பிடித்தனர். இதற்கு உடந்தையாக இருந்த தியேட்டர் நிர்வாகிகளையும் கைது செய்தனர்.