Don't Miss!
- News ஆரம்பிக்கும்போதே "மக்கர்" செய்த ஓட்டு மெஷின்.. நாகையில் ஒரு பூத்தில் மாதிரி வாக்குப்பதிவு தாமதம்!
- Sports என்னங்க சொல்றீங்க? சிஎஸ்கேக்கு வருகிறாரா ஆஸி. வேகம் ஹேசல்வுட்.. உண்மை என்ன?
- Automobiles சீன நிறுவனம் கேட்ட முக்கிய சான்றை வழங்கிய இந்தியா! மத்த நாடுகள வளச்சு போட்டதபோல இந்தியாவையும் வளச்சுபோட போகுது
- Lifestyle Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
கோவையில் தெறி படத்தை திருட்டுத்தனமாக தியேட்டரில் பதிவு செய்த சேனல் ஊழியர்கள் கைது!
கோவை: இன்று வெளியான விஜய்யின் தெறி படத்தை திருட்டுத்தனமாக பதிவு செய்ய முயன்ற சேனல் ஊழியர்கள் மற்றும் தியேட்டர் நிர்வாகிகளை போலீசார் கைது செய்துள்ளனர்.
தெறி படம் இன்று பிரமாண்டமாக வெளியாகியுள்ளது. ஆனால் தமிழகத்தில் மட்டும் சில அரங்குகள் படத்தை வெளியிட மறுத்துவிட்டன. டிக்கெட் விலை மற்றும் படத்துக்கு வைக்கப்பட்ட விலையை அவர்கள் ஏற்கவில்லை.
இந்த நிலையில் கோவையில் உள்ள சாந்தி (விநியோகஸ்தர் திருப்பூர் சுப்பிரமணியத்துக்கு சொந்தமானது) தியேட்டரில் காலை 8 மணிக்கு ஆரம்பிக்கப்பட்ட சிறப்புக் காட்சியில், படத்தின் அரை மணி நேரக் காட்சிகளை ஒரு தனியார் சேனல் மூலம் திருட்டுத்தனமாக பதிவு செய்ததாகக் கூறப்படுகிறது.
இந்த தகவல் அறிந்த மோனிகா பிலிம்ஸ் செந்தில், தகவலை போலீசாருக்குத் தெரிவித்தார். உடனடியாக போலீசார் தியேட்டருக்கு விரைந்து வந்து தெறி படத்தை வீடியோவில் பதிவு செய்த நபர்களைப் பிடித்தனர். இதற்கு உடந்தையாக இருந்த தியேட்டர் நிர்வாகிகளையும் கைது செய்தனர்.