Don't Miss!
- Education குரூப்-1 வேலைக்கான நேர்முகத் தேர்வு முடிவுகள் ரிலீஸ்...குஷியில் தேர்வர்கள்...!
- News வெடித்து சிதறிய பட்டாசு.. சிக்கலில் சிக்கிய அமைச்சர் கேஎன் நேரு மகன் அருண் நேரு.. பாய்ந்தது வழக்கு
- Technology ரூட்டு எடுத்த BSNL.. ரூ.699 போதும்.. 5 மாதங்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள்.. டேட்டா!
- Sports தோனி இனி பேட்டிங் ஆடவே மாட்டார்? சிஎஸ்கே எடுத்த முடிவு.. பெரும் ஏமாற்றம்.. காரணம் இதுதான்
- Travel தமிழ்நாட்டுக்குள் இருக்கிற தாஜ்மஹாலுக்கு நீங்க போய் இருக்கீங்களா – தாய்க்காக தாஜ்மஹால் கட்டிய மகன்!
- Lifestyle இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்கள் திருடிட்டு போன விலைமதிப்பில்லாத பொக்கிஷங்கள்... இதோட மதிப்பு என்ன தெரியுமா?
- Automobiles காருக்கு இன்சூரன்ஸ் எடுக்கும் போது இதெல்லாம் செக் பண்ணலேன்னா காசெல்லாம் வீணா போயிடும்!
- Finance தேர்தலில் போட்டியிட பணமில்லாத நிர்மலா சீதாராமன் சொத்து மதிப்பு என்ன தெரியுமா..?
ரஜினி மகளை திருமணம் செய்வதாக இளைஞர் கலாட்டா!
பிரபலங்களின் வீட்டில் விசேஷம் நடக்கும் நேரத்தில் சிலர் கலாட்டாவில் இறங்கி பரபரப்பு ஏற்படுத்துவது வழக்கம்.
ரஜினியின் மகள் சௌந்தர்யாவுக்கும் தொழிலதிபர் அஸ்வினுக்கும் நேற்று காலை சென்னையில் திருமணம் நடந்தது. அந்தத் திருமணம் நடந்த நேரத்தில், சென்னை போயஸ் கார்டனில் உள்ள நடிகர் ரஜினிகாந்த் வீட்டில் ஒரு இளைஞர் ஆர்ப்பாட்டத்தில் இறங்கினார்.
அவர் பெயர் சீனிவாசன். விழுப்புரம் அருகே சித்தக்குடியைச் சேர்ந்தவர். சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள மேன்ஷனில் தங்கியிருக்கிறார்.
நேற்று காலை திடீர் என்று போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்த் வீட்டுக்குச்சென்ற சீனிவாசன், அங்கிருந்த பாதுகாவலர்களிடம் நான் தான் ரஜினியின் மகளை திருமணம் செய்துகொள்ளப் போகிறேன் என்று கூறி ரகளை செய்துள்ளார். இது குறித்து அந்த பாதுகாவலர் தேனாம்பேட்டை போலீசில் புகார் செய்தார்.
போலீசார் விரைந்து வந்து அந்த நபரை பிடித்து விசாரணை நடத்தியதில் அவர் எம்.ஏ. படித்தவர் என்றும், மனநிலை சரியில்லாதவர் என்பதும் தெரியவந்தது.
இது தொடர்பாக அவருடன் வந்திருந்த நண்பர் வெங்கடேசனிடம் உறுதிமொழி எழுதி வாங்கிக்கொண்டு, அனுப்பி வைத்தனர் போலீசார்.