Don't Miss!
- Automobiles பைக் கவரின் விலை ரூ.16 ஆயிரமா... எதில் தயாரித்து கொடுப்பார்கள் என்று தெரியலயே!! பைக்குடன் இதெல்லாம் கிடைக்கும்
- Lifestyle ஆண்களே! அனைத்து பெண்களுக்கும் உங்கள பிடிக்கணுமா? அப்ப சாணக்கியர் சொல்லும் இந்த 6 குணங்களை வளர்த்துக்கோங்க!
- News தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு 69.46%.. தருமபுரியில் தான் அதிகம்.. மத்திய சென்னையில் மோசம்! முழு தகவல்!
- Sports அமுக்கு டுமுக்கு அமால் டுமால்.. தல கொஞ்சம் தள்ளி நில்லுங்க.. சிஎஸ்கேவை வெளுக்கும் தரமான மீம்ஸ்!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
அஜீத் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது
நடிகர் அஜீத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை போலீசார் இன்று கைது செய்தனர்.
சில தினங்களுக்கு முன்பு ஆம்புலன்ஸ் சேவை எண்ணான 108-க்கு மர்ம நபர் ஒருவர் தொடர்பு கொண்டு திருவான்மியூரில் உள்ள நடிகர் அஜீத் வீட்டில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாகவும், அது விரைவில் வெடிக்கும் என்றும் கூறி போனை துண்டித்தார்.
உடனே அடையாறு போலீசார் மோப்ப நாய் மற்றும் வெடிகுண்டு நிபுணர்களுடன் அஜீத் வீட்டுக்குச் சென்று சோதனையிட்டனர். சுமார் ஒன்றரை மணி நேரம் சோதனைக்கு பின்னர் வெடிகுண்டு எதுவும் இல்லை என்று தெரியவந்தது.
இதுபற்றி திருவான்மியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மர்ம நபர் பேசிய செல்போன் எண்ணை வைத்தும் விசார்த்து வந்தனர்.
இந்நிலையில், அஜீத் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த அந்த மர்ம நபரை போலீசார் தற்போது கைது செய்திருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.
அவர் யார்? எதற்காக இந்த வெடிகுண்டு மிரட்டல் விடுத்தார்? என்பது குறித்து அவரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.