Don't Miss!
- Technology AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது? இது தெரியலனா கரண்ட் பில் கண்டிப்பா எகுறும்..
- News மோடியின் ரத்த அணுக்களில் "முஸ்லிம் வெறுப்பு".. இனி பாஜக அவ்ளோதான்.. கோபத்துடன் சொன்னது யார் பாருங்க
- Lifestyle எகிப்தியர்கள் ஏன் உலகின் சிறந்த நாகரீகமாக கருதப்படுகிறார்கள் தெரியுமா? இந்த 3 அதிசயங்களே அதற்கு சாட்சி!
- Finance அமெரிக்காவுக்கு பிறக்கும் இந்திய நகை கடைகள்.. சின்ன கல்லு பெத்த லாபம்..!!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Automobiles மதுரை, திருச்சி சேலம் ஸ்டேஷன்களில் ரூ20க்கு ஃபுல் மீல்ஸ்! முன்பதிவில்லாத பெட்டி அருகே விற்பனை செய்ய உத்தரவு!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
- Sports இன்னும் 6 போட்டி.. 3ல் அடிவாங்கினால் சோலி முடிஞ்ச்.. பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்?
'பவர்' ஸ்டாரின் பெண் புரோக்கர் வெங்கடம்மா கைது
பெரும் மோசடிவழக்கில் சிக்கி பவர்ஸ்டார் சீனிவாசன் தறபோது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் மீது அடுத்தடுத்து வழக்குகளும், புகார்களும் குவிந்து வருகின்றன.
இந்த நிலையில் தற்போது பவர்ஸ்டார் சீனிவாசனுக்கு புரோக்கர்களாக செயல்பட்ட இருவரை போலீஸார் சென்னையில் கைது செய்துள்ளனர். இவர்கள் இருவரும் பவருக்கு புரோக்கர்களாக செயல்பட்டு வந்துள்ளனர்.
அவர்களில் ஒருவர் பெண், பெயர் வெங்கடம்மா. 46 வயதுப் பெண் இவர். இன்னொருவர் 45 வயதான கிருஷ்ணசாமி. இருவரும் தி.நகரைச் சேர்ந்தவர்கள்.
இவர்கள் தி.நகரில் ஒரு ஆபீஸ் போட்டுள்ளனர். கடனுக்காக அலைபவர்களைத் தேடிக் கண்டுபிடித்து பவரிடம் கூட்டி வந்து மோசடி செய்வதே இவர்களது தொழில். இப்படி ஆள் கூட்டி வருவதற்காக பவரிடமிருந்து இருவரும் கமிஷன் பெற்று வந்துள்ளனர்.
இவர்களின் கைது குறித்து சென்னை குற்றப் பிரிவு போலீஸார் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
வெங்கம்மா என்ற லட்சுமிக்கு சொந்த ஊர் ஆந்திரா மாநிலமாகும். இவர் தெலுங்கு தெரிந்தவர்களையும், மற்றவர்களையும் ஏமாற்றுவதில் கெட்டிக்காரி. கிருஷ்ணசாமி, கோவை மாவட்டம் பல்லடத்தை சேர்ந்தவர்.
இவர் கடந்த 20 ஆண்டுகளாக சென்னை விருகம்பாக்கத்தில் வசித்து வருகிறார். 9-ம் வகுப்பு வரை படித்துள்ளார். இவர் பவர் ஸ்டார் சீனிவாசனின் முக்கிய புரோக்கராக செயல்பட்டுள்ளார்.
இவர், மலேசியாவை சேர்ந்த மணியம் என்பரை 2010-ம் ஆண்டு பவர் ஸ்டார் சீனிவாசனுக்கு அறிமுகப்படுத்தி வைத்துள்ளார். அப்போது மணியத்துக்கு ரூ.100 கோடி கடன் வாங்கித் தருவதாக கூறி, அவரிடம் இருந்து ரூ.2.50 கோடியை சீனிவாசன் ஏமற்றியுள்ளார்.
கைது செய்யப்பட்டுள்ள வெங்கம்மாவும், கிருஷ்ணசாமியும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, ஜெயலில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் 2 பேரும் பவர் ஸ்டார் சீனிவாசனின் முக்கிய கூட்டாளிகள் ஆவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.