Don't Miss!
- News முஸ்லிம்களுக்கு ஓபிசி ஸ்டேடஸ் கொடுத்தது காங்கிரஸ்.. மோடி பேச்சு.. கூட்டணியிலுள்ள தேவகவுடா ஷாக்
- Finance ஐசிஐசிஐ வங்கி கஸ்டமரா நீங்க.. மொபைல் ஆப்-ல் கோளாறு.. கிரெடிட் கார்டு தரவுகள் திருடுபோகும் அச்சம்!!
- Lifestyle சர்க்கரை நோயாளிகள் சிக்கன் சாப்பிடலாமா? அப்படி சாப்பிட்டா என்ன நடக்கும் தெரியுமா? எப்படி சாப்பிடணும் தெரியுமா?
- Automobiles புதிதாக விற்பனைக்கு வர இருக்கும் மஹிந்திரா காரு மைலேஜை இவ்ளோ தருமா! இதுக்கே எல்லாரும் அந்த காரை வாங்க போறாங்க!
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
மத்தாப்பு பட நாயகன் மீது சொந்த ஊரில் போலீஸ் தாக்குதல்!
நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள நாலந்துலாகிராமத்தை சேர்ந்தவர் ஜெயன். இவர் தினந்தோறும் நாகராஜன் இயக்கும் மத்தாப்பு என்ற தமிழ் படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.
நாலந்துலாகிராமத்தில் நடக்கும் கோவில் திருவிழாவில் கலந்து கொள்ள அவர் சொந்த ஊருக்கு வந்திருந்தார்.
தனது நண்பர்களை காரில் அழைத்து செல்வதற்காக திசையன்விளை பேருந்து நிலையத்திற்கு வந்து நின்றார். அப்போது அங்கு ரோந்து வந்த திசையன்விளை காவல்துறையினர் காரை அங்கிருந்து எடுக்குமாறு கூறியுள்ளனர்.
இது தொடர்பாக ஜெயனுக்கும், காவல்துறை அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து காவல்துறையினர் ஜெயனை சரமாரி தாக்கி அவரது காரை காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று விட்டனராம்.
இந்நிலையில் நேற்று ஜெயன் தன்னை காவல்துறை அதிகாரி தாக்கியதாக கூறி பாளை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தார். மேலும் ஜெயனின் தந்தை சுடலைக்கண்ராஜா தனது உறவினர்களுடன் இன்று நெல்லை மாவட்ட எஸ்.பி. அலுவலகத்திற்கு திரண்டு வந்து எஸ்.பி.யிடம் ஒரு புகார் மனு கொடுத்தார். அதில் திசையன்விளை ஏ.எஸ்.பி. வருண்குமார் எனது மகனை எந்தவித காரணமும் இல்லாமல் தாக்கியுள்ளார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
ஏ.எஸ்.பி. வருண்குமார் மீது ஏற்கெனவே பலதரப்பினரும் அதிருப்தியில் உள்ளனர். அப்பகு வியாபாரிகள் எழுத்துப்பூர்வமாக புகார் அளித்துள்ளனர். இப்போது நடிகரைத் தாக்கிய வழக்கு மூலம் ஏஎஸ்பி சிக்கலுக்குள்ளாகியுள்ளார்.
-
கூலி.. மயக்க நிலைக்கு சென்ற சூப்பர் ஸ்டார்.. ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு பறந்த ஹெலிகாப்டர்.. என்ன நடந்தது?
-
ஒரே டிப்ரெஷன்.. வாழ்க்கையே போச்சு.. தப்பான முடிவை எடுக்க பார்த்த நடிகை.. சட்டென திறந்த கதவு!
-
மொத்தம் ரூ.7 கோடி..ஏமாற்றி விட்டார்.. மஞ்சும்மல் பாய்ஸ் தயாரிப்பாளர்கள் மீது வழக்குப்பதிவு!