Don't Miss!
- News 4 மணி வரை உக்கிரமா இருப்பேன்! சுட்டெரிக்கும் வெயில்..வயதானவர்களுக்கு வார்னிங்! எப்போது வாக்களிப்பது?
- Finance பேடிஎம் UPI ஐடிகள், புதிய வங்கிகளுக்கு மாற்றம்.. RBI அதிரடி அறிவிப்பு!
- Technology இப்படியொரு புரொஜெக்டர் யாரும் பார்த்ததில்லை.. 32GB மெமரி.. 1080P ரெசல்யூஷன்.. எந்த மாடல்? என்ன விலை?
- Lifestyle தினமும் 10 பவுன் தங்கத்தை தூசியாக உமிழும் அதிசய எரிமலை... இந்த எரிமலையா இல்ல தங்கச்சுரங்கமானே தெரிலயே...!
- Automobiles ஹெல்மெட் போடாமல் பைக்கில் போன விஜய் சேதுபதி! ஓட்டு போட வந்த இடத்தில் மானமே போச்சு!
- Travel சென்னையிலிருந்து சம்மர் ஸ்பெஷல் வந்தே பாரத் ரயில்கள் – திருச்சி, மதுரை, நாகர்கோவில்!
- Sports "மும்பை சூப்பர் கிங்ஸ்"னு பேரை மாத்திக்கலாம்.. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மும்பை ஆக்கிரமிப்பு
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
சமந்தாவை பார்க்க வந்த ரசிகர்கள் மீது போலீஸ் தடியடி.. கிருஷ்ணகிரியில் பரபரப்பு!
Recommended Video
கிருஷ்ணகிரி : சமந்தாவிற்கு பெரிய ரசிகர் கூட்டம் இருப்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான். அவர் நேற்று கிருஷ்ணகிரியில் ஒரு புதிய நகைக்கடை திறப்பு விழாவிற்காக வந்திருந்தார்.
சமந்தாவை பார்ப்பதற்காக ஆயிரக்கணக்கான ரசிகர்கள் அங்கு குவிந்திருந்தனர். அப்போது கூட்டத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைத்தனர்.
அதனால் அந்த இடத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பிறகு, நகைக்கடையைத் திறந்து வைத்தார் சமந்தா.
சமந்தா
தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக வலம்வருபவர் நடிகை சமந்தா. இவர் தற்போது, சுகுமார் இயக்கத்தில் ராம்சரண் கதாநாயகனாக நடிக்கும் படம் 'ரங்கஸ்தலம்' திரைப்படத்தில் நடித்துள்ளார். ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.
நகைக்கடை திறப்பு
இந்நிலையில் நடிகை சமந்தா, நேற்று கிருஷ்ணகிரி - பெங்களூரு சாலையில், வெங்கடேஸ்வரா நகைக்கடை திறப்பு விழாவில் பங்கேற்றுள்ளார். காலை 10 மணிக்கு வருகைதரவிருந்த சமந்தாவை காண 8 மணிக்கே ரசிகர்கள் கூட்டம் கூடியது.
போக்குவரத்து பாதிப்பு
இதனால் நகைக்கடை அருகில் உள்ள அரசு மகளிர் மற்றும் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற TNPSC 'குரூப்-4' தேர்வில் கலந்துகொள்ள வந்தவர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர். இதனை கட்டுப்படுத்த போலீசார் சாலையின் இரு புறமும் கயிறு கட்டி போக்குவரத்தை சரிப்படுத்தினர்.
ரசிகர்கள் மீது தடியடி
10 மணிக்கு காரில் வந்த நடிகை சமந்தாவை, போலீஸ் பாதுகாப்பை மீறி, ரசிகர்கள் சூழ்ந்து கொண்டதால், அவரால் காரை விட்டு இறங்க முடியவில்லை. இதனால் போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைத்தனர். சாலையின் நாலாபுறமும் இளைஞர்கள் சிதறி ஓடினர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் நகைக் கடை திறப்பு விழா நடந்தது.
-
புஷ்பா 2 ஓடிடி உரிமம் இத்தனை கோடிக்கு விற்பனையா?.. பல டாப் நடிகர்கள் லைஃப் டைம் வசூலே இவ்ளோ இல்லையே!
-
98 கோடி சிக்கிடுச்சு.. ஷில்பா ஷெட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் சொத்துக்களை முடக்கிய அமலாக்கத்துறை!
-
ரவுடி பேபின்னா சும்மாவா.. அப்பவே அந்தாட்டம் போட்டிருக்காரே சாய் பல்லவி.. காலேஜ் வீடியோவை பாருங்க!