Don't Miss!
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- News திடீர் மாரடைப்பு.. பிரபல தாதா முக்தார் அன்சாரி உயிரிழப்பு.. பதற்றம் - 144 தடை உத்தரவு
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Automobiles பிரசார வேனை சொகுசு பங்களா போல செட்டப் செய்த கமலஹாசன்! இதை பார்க்கவே கூட்டம் குவியுமே!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
சிவகார்த்திகேயனின் மெரினா படத்தில் நடித்த இளம் நடிகர் தூக்கிட்டு தற்கொலை.. ரசிகர்கள் அதிர்ச்சி!
சென்னை: சிவகார்த்திகேயனின் மெரினா படத்தில் நடித்த நடிகர் தென்னரசு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிவகார்த்திகேயன் ஓவியா நடிப்பில் கடந்த 2012ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் மெரினா. இந்தப் படத்தை இயக்குநர் பாண்டிராஜ் இயக்கியிருந்தார்.
இந்தப்படம் பெரும் வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்தப் படத்தில் நடிகர் தென்னரசு ஒரு குறிப்பிடத்தக்க கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்.
5 நாள்தான் இருக்கு.. இவர்கள்தான் பிக்பாஸில் பங்கேற்க போகும் போட்டியாளர்களா? லீக்கான இறுதிப்பட்டியல்!
குடும்பத்தகராறு
தமிழில் மேலும் சில படங்களிலும் நடித்துள்ளார். தென்னரசு தனது குடும்பத்தினருடன் சென்னை மைலாப்பூரில் வசித்து வந்தார். இந்நிலையில் இன்று குடும்பத் தகராறு காரணமாக நடிகர் தென்னரசு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இரண்டு வயதில் குழந்தை
தென்னரசு கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தான் தனது காதலியை திருமணம் செய்தார். இவர்களுக்கு இரண்டு வயதில் ஒரு குழந்தை உள்ளது. இந்நிலையில் தென்னரசு மதுவுக்கு அடிமையாகியுள்ளார். அடிக்கடி குடித்துவிட்டு வந்து மனைவியுடன் தகராறு செய்து வந்துள்ளார் தென்னரசு.
தூக்கிட்டு தற்கொலை
இந்நிலையி இன்றும் குடித்து விட்டு வந்து தனது மனைவியுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார் தென்னரசு. பின்னர் அதே வேகத்தில் அறைக்குள் சென்ற தென்னரசு சீலிங் ஃபேனில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
வசிப்பவர்கள்
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் தென்னரசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், குடும்பத்தினரிடமும் தென்னரசு வீட்டின் அருகே வசிப்பவர்களிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெரும் அதிர்ச்சி
30 வயதே ஆன நடிகர் தென்னரசு குடும்பத்தகாராறு காரணமாக தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குடும்பத் தகராறால் ஏற்பட்ட மன அழுத்தத்தால் நடிகர் தென்னரசு தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது.
-
Vijay - புஸ்ஸி ஆனந்த்துடன் விஜய் சகவாசம்.. ஒரு அரசியல்வாதியும் இப்படி செய்யல.. கிழித்து தொங்கவிட்ட எஸ்.ஏ.சி
-
ஒரே தேதியில் இரண்டு இழப்புகள்.. சந்தானத்துக்கு உச்சக்கட்ட வேதனை.. ரசிகர்கள் ஆறுதல்
-
யங் லுக்கில் மாஸ் காட்டுறாரே கவின்.. ஸ்டார் படத்தின் டப்பிங் ஓவர்.. சீக்கிரமே பிளாக்பஸ்டர் ரெடி!