Don't Miss!
- News "கள்ளச் சந்தையில் ஐபிஎல் டிக்கெட்".. CSK போட்டியின்போது 12 பேரை கொக்கி போட்டு தூக்கிய போலீசார்!
- Automobiles இது கார் இல்ல மிதக்கும் கப்பல்!! புதுசா வாங்கியிருக்கும் இந்த நடிகர் யாரென்று தெரிகிறதா?
- Lifestyle Constipation: மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து உடனே விடுபடணுமா? இந்த பானங்களை தினமும் குடிங்க..
- Sports IPL 2024: வெட்கத்தை விட்டு சொல்றேன்.. சிஎஸ்கே அணியால் இதை கூட செய்ய முடியலை.. புலம்பிய பிளெம்மிங்
- Finance மியூச்சுவல் ஃபண்ட்களில் முதலீடு செய்ய சரியான நேரம் எது? இதை நோட் பண்ணிக்கோங்க!
- Technology ரூ.56,999 க்கு அறிமுகமான OnePlus போனை ரூ.19,149 க்கு விற்கும் Amazon.. ஆல் ஏரியாவிலும் ஆர்டர் பறக்குது!
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
ஹோலி பண்டிகையில் ஆபாச போஸ் கொடுத்த விவகாரம்... இந்தி நடிகை சோபியா கைது?
மும்பை: ஆபாசமாக உடை அணிந்து ஹோலி பண்டிகையைக் கொண்டாடியதாக இந்தி நடிகை சோபியா கயாத் மீது வழக்குத் தொடர இந்து அமைப்புகள் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே விரைவில் அவர் கைது செய்யப்படலாம் எனக் கூறப்படுகிறது.
வசந்தத்தை வரவேற்கும் விதமாக வண்ண வண்ணப் பொடிகளைத் தூவி ஹோலி பண்டிகையைக் கொண்டாடுவது வழக்கம். அந்த வகையில் கடந்த வாரம் கொண்டாடப்பட்ட ஹோலி பண்டிகையின் போது, பிரபல இந்தி கவர்ச்சி நடிகை சோபியா கயாத்தின் ஹோலி வீடியோ ஒன்று இணையத்தில் வெளியானது.
அதில், அரைகுறை ஆடையில் ஆபாச போஸ் கொடுத்தவாறு அவர் ஹோலி கொண்டாடும் காட்சிகள் பதிவாகி இருந்தன. உடலில் வண்ணப் பொடிகளை பூசி ஆபாசமாக இந்த படத்தை அவர் எடுத்து இருந்தார்.
சோபியாவின் இந்த செயலுக்கு இந்து அமைப்புகள் கண்டனம் தெரிவித்தன. ஹோலி என்பது ஆன்மீக பண்டிகை. அதை சோபியா கொச்சைப்படுத்தி உள்ளார் என அவர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில், இது தொடர்பாக சோபியா மீது வழக்குத் தொடர இந்து அமைப்புகள் முடிவு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது. எனவே, சோபியா விரைவில் கைது செய்யப்படலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.