Don't Miss!
- Lifestyle இந்த உணவுகளை கண்டிப்பாக பிரஷர் குக்கரில் சமைக்கக்கூடாது.. ஏன் தெரியுமா?
- Finance டீ கடையில் கூட இப்ப கிரெடிட் கார்டு பேமெண்ட் தான்.. ரூ.1 லட்சம் கோடியை தாண்டி புதிய சாதனை..!
- News 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்: கர்நாடகா, கேரளா உட்பட் 13 மாநிலங்கள்- 88 தொகுதிகளில் நாளை வாக்குப் பதிவு!
- Automobiles துபாயில் சென்னை விமானத்தை தவறவிட்ட 15 வயது சிறுமி! அடுத்து நடந்த விஷயம் தான் அதிசயம்!
- Technology இதுதான் புதிய Infinix போன்.. 108MP கேமரா.. JBL சவுண்ட்.. 45W சார்ஜிங்.. எந்த மாடல்? எப்போது அறிமுகம்?
- Sports தோனியே சரி.. முஸ்தஃபிசுர்-க்கு பதிலாக வரும் ஸ்பின்னர்.. சிஎஸ்கே அணியில் நடக்கப் போகும் மாற்றம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
ஹோலி பண்டிகையில் ஆபாச போஸ் கொடுத்த விவகாரம்... இந்தி நடிகை சோபியா கைது?
மும்பை: ஆபாசமாக உடை அணிந்து ஹோலி பண்டிகையைக் கொண்டாடியதாக இந்தி நடிகை சோபியா கயாத் மீது வழக்குத் தொடர இந்து அமைப்புகள் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே விரைவில் அவர் கைது செய்யப்படலாம் எனக் கூறப்படுகிறது.
வசந்தத்தை வரவேற்கும் விதமாக வண்ண வண்ணப் பொடிகளைத் தூவி ஹோலி பண்டிகையைக் கொண்டாடுவது வழக்கம். அந்த வகையில் கடந்த வாரம் கொண்டாடப்பட்ட ஹோலி பண்டிகையின் போது, பிரபல இந்தி கவர்ச்சி நடிகை சோபியா கயாத்தின் ஹோலி வீடியோ ஒன்று இணையத்தில் வெளியானது.
அதில், அரைகுறை ஆடையில் ஆபாச போஸ் கொடுத்தவாறு அவர் ஹோலி கொண்டாடும் காட்சிகள் பதிவாகி இருந்தன. உடலில் வண்ணப் பொடிகளை பூசி ஆபாசமாக இந்த படத்தை அவர் எடுத்து இருந்தார்.
சோபியாவின் இந்த செயலுக்கு இந்து அமைப்புகள் கண்டனம் தெரிவித்தன. ஹோலி என்பது ஆன்மீக பண்டிகை. அதை சோபியா கொச்சைப்படுத்தி உள்ளார் என அவர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில், இது தொடர்பாக சோபியா மீது வழக்குத் தொடர இந்து அமைப்புகள் முடிவு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது. எனவே, சோபியா விரைவில் கைது செய்யப்படலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.