Don't Miss!
- News கார்த்தி சிதம்பரம்.. ஆற்றல் அசோக்குமார் எல்லாம் ஒன்னுமே இல்ல.. பெரும் பணக்கார வேட்பாளர் இவர்தான்!
- Sports எப்பா சாமி! இப்படி யாக்கர் போட்றாரு? முஸ்தபிசுர் போனாலும் இனி கவலையில்ல.. Gleeson பவுலிங் வீடியோ
- Lifestyle ஏசி அறையில் தூங்குவதால் உங்க உடலில் என்னென்ன பிரச்சினைகள் வரலாம் தெரியுமா? ஏசி ரூம்ல இப்படி தூங்காதீங்க...!
- Technology ஆஹா.. கொடுத்துவச்சவங்கயா Jio பயனர்கள்.. கிள்ளிக்கொடுக்காம அள்ளிக்கொடுக்கும் அம்பானி.. பெஸ்ட் பிளான்ஸ்..
- Finance 4.54 பில்லியன் வருட பழைய பொக்கிஷம்.. உள்ளிருந்து வந்த உஸ்ஸ் சத்தம்.. திறந்து பார்த்தவர்களுக்கு ஷாக்
- Automobiles நீச்சல் உடையில் வந்து பஸ் பயணிகளை கிறங்கடித்த பெண்... ஓட்டு போட்ற வயசு வந்தவங்க மட்டும் வீடியோவை பாருங்க...
- Travel திருப்பதி பெருமாளை தரிசிக்க வேண்டுமா – ஏப்ரல் 24 ஆம் தேதி டிக்கெட் புக் பண்ண மறந்துடாதீங்க!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
பாராட்டு விழாவும் நடத்தி, இளையராஜாவுக்கு ரூ. 3.5 கோடி பணமா..? விஷால் மீது போலீசில் புகார்
தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் மீது சென்னை மாநகர காவல் ஆணையரிடம் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை : தயாரிப்பாளர் சங்கத்தின் பணம் ரூ. 7 கோடியை கையாடல் செய்ததாக தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் மீது எஸ்.வி.சேகர், தயாரிப்பாளர் ஏ.எல்.அழகப்பன், கே.ராஜன் ஆகியோர் சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளனர்.
தயாரிப்பாளர்கள் சங்கத்தில் முறைகேடு நடந்துள்ளது, பொதுக்குழுவைக் கூட்டவில்லை, இளையராஜா நிகழ்ச்சி எதிர்ப்பு என தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் மீது சில தயாரிப்பாளர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இந்த விவகாரம் தொடர்பாக சமீபத்தில் தயாரிப்பாளர் சங்கத்திற்கு பூட்டு போடப்பட்டது. அதனை உடைக்க முயன்ற விஷால் கைது செய்யப்பட்டார். பின்னர் சீல் வைக்கப்பட்ட கட்டிடம், நீதிமன்ற உத்தரவிற்குப் பின் திறக்கப்பட்டது எல்லாம் ஊரறிந்த கதை தான்.
இந்நிலையில் அடுத்தமாதம் இளையராஜா நிகழ்ச்சியை நடத்த விஷால் ஏற்பாடுகளை செய்து வருகிறார். இந்த நிகழ்ச்சிக்கு தடைகோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
இந்த சூழலில் விஷால் மீது எஸ்.வி.சேகர், கே.ராஜா, ஏ.எல்.அழகப்பன், கதிரேசன், சுரேஷ் காமாட்சி உள்ளிட்டோர் சென்னை காவல் ஆணையரிடம் கையாடல் புகார் தெரிவித்துள்ளனர். அதில் அனுமதியின்றி தயாரிப்பாளர் சங்க வைப்பு நிதி ரூ. 8.45 கோடி பணத்தை விஷால் எடுத்து செலவழித்துள்ளதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதனை விஷாலும் ஒப்புக் கொண்டதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக பின்னர் செய்தியாளர்களை அவர்கள் கூட்டாகச் சந்திந்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது, "தயாரிப்பாளர் சங்க வைப்புநிதியான ரூ. 7 கோடியை விஷால் தன்னிச்சையாக செலவு செய்ததாக நாங்கள் கூறி வந்தோம். விஷாலே கணக்கு வழக்குத் தொடர்பாக ஒரு கடிதம் கொடுத்துள்ளார். அதில், சங்கத்திலிருந்து ரூ. 8.75 கோடி பணத்தை எடுத்துள்ளோம் என அவரே கூறியுள்ளார்.
சங்கத்தின் பணத்தை அனுமதியின்றி எடுத்து விட்டு, திரும்பி வைத்தாலும் அது கையாடல் தான். ஆகையால் அவர் மீதும், மற்ற நிர்வாகிகள் மீதும் போலீசில் புகார் அளித்துள்ளோம்.
பாராட்டு விழாவும் நடத்தி, இளையராஜாவுக்கு மூன்றரை கோடி ரூபாய் பணமும் கொடுப்பது ஏன்? விஷாலின் நண்பர் ரமணா சங்கத்து உறுப்பினரே இல்லை, அவரிடம் பொறுப்பை ஒப்படைத்து இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்யச் சொல்லி இருக்கிறார்கள். ஆனால் அந்த நிகழ்ச்சிக்கான தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமை வழங்கியதில் வெளிப்படைத்தன்மை இல்லை
இளையராஜா நிகழ்ச்சியை நாங்கள் தடுக்க விரும்பவில்லை. ஆனால் முறைப்படி செய்யுங்கள் என்றுதான் கூறுகிறோம். சங்கத்திலிருந்து எடுத்த பணத்தை திரும்ப வையுங்கள். அதோடு உடனடியாக பொதுக்குழுவைக் கூட்டி தேர்தலை அறிவியுங்கள்" என அவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.
-
மறக்கமுடியுமா சின்னக் கலைவாணரை.. விவேக்கின் 3ம் ஆண்டு நினைவு தினம்.. செடிகளை நடும் செல் முருகன்!
-
சூரியன் படத்துல சரத்குமாருக்கு பதில் இவரா?.. கவுண்டமணி சரியான நக்கல் புடிச்ச ஆளு.. பவித்ரன் பேட்டி!
-
விக்ரமிற்கு தேசிய விருது கன்பார்ம்.. தங்கலான் மேக்கிங் வீடியோவை பார்த்து மிரண்ட ஃபேன்ஸ்!