Just In
- 7 min ago
ஏன் ஆளு பண்டாரத்தி.. எடுப்பான செம்பருத்தி.. வெளியானது கர்ணன் படத்தின் இரண்டாவது சிங்கிள் ட்ராக்!
- 43 min ago
ரியல் ஹீரோவான மாதவன் மகன்.. நீச்சல் போட்டியில் இந்தியாவுக்காக வெண்கலப் பதக்கம் வென்று அசத்தல்!
- 50 min ago
கமல் ஸ்டைலில் ஆடை பிராண்ட் ஆரம்பித்த பிக்பாஸ் பிரபலம்.. பேர பாத்தீங்களா.. வேற லெவல்!
- 2 hrs ago
வீட்ல விசேஷமாம்.. கணவருடன் ஹோம்லி லுக்கில் அனிதா சம்பத்.. என்ன மேட்டர் என கேட்கும் நெட்டிசன்ஸ்!
Don't Miss!
- Finance
தங்கம், வெள்ளி, சென்னை, gold, silver,chennai, coimbatore, madurai, சென்னை, கோவை, கோயமுத்தூர், மதுரை
- News
சட்டசபை தேர்தலில் களமிறங்கும் எம்ஜிஆர் பேரன் ... கடைசி வரை அதிமுகவில் இருப்பேன் என உருக்கம்
- Sports
கட்டைவிரல் இன்னும் சாரியாகலனு ஜடேஜா யோசிப்பார்.. காயத்துல கூட கிண்டலா..கவாஸ்கர் சுவாரஸ்ய பதில்
- Automobiles
ஐரோப்பியர்களுக்கு குறி... ஹூண்டாய் பையான் எஸ்யூவி வெளியீடு... இந்திய சந்தையில் விற்பனைக்கு வருமா?
- Lifestyle
ஆரோக்கியத்திற்காக நீங்க சாப்பிடும் இந்த நட்ஸ் வகை உங்க உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்துமாம்...ஜாக்கிரதை!
- Education
ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் தேசிய நல்வாழ்வு மற்றும் குடும்பநல நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா?
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
வீட்டின் அருகில் இருந்த வழிபாட்டு தலத்தை இடித்தாரா? நடிகர் விமல் மீது போலீசில் பரபரப்பு புகார்
மணப்பாறை: வழிபாட்டு தலத்தை இடித்ததாக நடிகர் விமல் மீது போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
பசங்க, களவாணி, கலகலப்பு, கேடி பில்லா கில்லாடி ரங்கா உட்பட பல படங்களில் ஹீரோவாக நடித்தவர் விமல்.
பூபதி பாண்டியன் இயக்கிய மன்னர் வகையறா என்ற படத்தை சொந்தமாகத் தயாரித்து வெளியிட்டார்.

பண்ணாங்கொம்பு
கடைசியாக, அவர் நடித்து கன்னிராசி என்ற படம் வெளியானது. இதை முத்துக்குமரன் இயக்கி இருந்தார். இதில் வரலட்சுமி, பாண்டியராஜன், யோகிபாபு, ரோபோ சங்கர் உட்பட பலர் நடித்திருந்தனர். அடுத்து சில படங்களில் நடித்து வருகிறார். விமலுக்கு, திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த பண்ணாங்கொம்பு சொந்த ஊர்.

விளக்குத் தூண்
இந்த ஊரில் அவரது வீட்டுக்கு முன் சுமார் 100 மீட்டர் தூரத்தில், ஊர் மந்தை இருக்கிறது. அங்கு அந்தப் பகுதியினர் விளக்குத் தூண் அமைத்து வழிபட்டு வந்தனர். இந்த இடத்தில் 48 நாட்களுக்கு முன் அதே பகுதியை சேர்ந்தவர்கள் 2 அடிக்கு சுவர் எழுப்பி, மேடை அமைத்திருந்தனர்.

தரை மட்டமாக்கியது
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 7 பேர் கொண்ட ஒரு கும்பல் ஜேசிபி இயந்திரத்துடன் வந்து அந்த விளக்குத்தூண் மேடையை இடித்து தரை மட்டமாக்கியது. இதை தட்டிக் கேட்ட அப்பகுதியினரையும் அந்தக் கும்பல் மிரட்டியதாகவும், இந்த கும்பலில் நடிகர் விமலும் இருந்தார் எனவும் கூறப்படுகிறது.

போலீசில் புகார்
இதுபற்றி அதே ஊரை சேர்ந்த பூசாரி செல்வம் என்பவர் புத்தாநத்தம் போலீசில் புகார் செய்தார். மணப்பாறை டிஎஸ்பி பிருந்தா விசாரணை நடத்தி வருகிறார். இந்நிலையில் விசாரணைக்காக போலீசார் விமலை அழைத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.