Don't Miss!
- News நேரடியாக களத்தில் இறங்கி வாதிட்ட கெஜ்ரிவால்.. கடும் எதிர்ப்பு தெரிவித்த ED.. கோர்ட்டில் நடந்த பரபர
- Sports அரசியலில் குதிக்க போகும் சானியா மிர்சா.. மக்களுக்கு சேவை செய்ய திட்டம்.. எந்த கட்சி தெரியுமா?
- Technology டீஸரே மிரளுது.. உலக ரசிகர்களை வியப்படைய செய்த Nothing.. புதுசா 2 ப்ராடக்ட்.. என்னென்ன எதிர்பார்க்கலாம்?
- Lifestyle பழங்கால போட்டோக்களில் யாராவது சிரிச்சு நீங்க பாத்திருக்கீங்களா? பார்த்திருக்க வாய்ப்பேயில்லை... ஏன் தெரியுமா?
- Finance சென்செக்ஸ்: வருடத்தின் கடைசி நாள் ரூ.128.8 லட்சம் கோடி லாபம்.. பண மழையில் முதலீட்டாளர்கள்..!!
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Automobiles மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
வீட்டின் அருகில் இருந்த வழிபாட்டு தலத்தை இடித்தாரா? நடிகர் விமல் மீது போலீசில் பரபரப்பு புகார்
மணப்பாறை: வழிபாட்டு தலத்தை இடித்ததாக நடிகர் விமல் மீது போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
பசங்க, களவாணி, கலகலப்பு, கேடி பில்லா கில்லாடி ரங்கா உட்பட பல படங்களில் ஹீரோவாக நடித்தவர் விமல்.
பூபதி பாண்டியன் இயக்கிய மன்னர் வகையறா என்ற படத்தை சொந்தமாகத் தயாரித்து வெளியிட்டார்.
பண்ணாங்கொம்பு
கடைசியாக, அவர் நடித்து கன்னிராசி என்ற படம் வெளியானது. இதை முத்துக்குமரன் இயக்கி இருந்தார். இதில் வரலட்சுமி, பாண்டியராஜன், யோகிபாபு, ரோபோ சங்கர் உட்பட பலர் நடித்திருந்தனர். அடுத்து சில படங்களில் நடித்து வருகிறார். விமலுக்கு, திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த பண்ணாங்கொம்பு சொந்த ஊர்.
விளக்குத் தூண்
இந்த ஊரில் அவரது வீட்டுக்கு முன் சுமார் 100 மீட்டர் தூரத்தில், ஊர் மந்தை இருக்கிறது. அங்கு அந்தப் பகுதியினர் விளக்குத் தூண் அமைத்து வழிபட்டு வந்தனர். இந்த இடத்தில் 48 நாட்களுக்கு முன் அதே பகுதியை சேர்ந்தவர்கள் 2 அடிக்கு சுவர் எழுப்பி, மேடை அமைத்திருந்தனர்.
தரை மட்டமாக்கியது
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 7 பேர் கொண்ட ஒரு கும்பல் ஜேசிபி இயந்திரத்துடன் வந்து அந்த விளக்குத்தூண் மேடையை இடித்து தரை மட்டமாக்கியது. இதை தட்டிக் கேட்ட அப்பகுதியினரையும் அந்தக் கும்பல் மிரட்டியதாகவும், இந்த கும்பலில் நடிகர் விமலும் இருந்தார் எனவும் கூறப்படுகிறது.
போலீசில் புகார்
இதுபற்றி அதே ஊரை சேர்ந்த பூசாரி செல்வம் என்பவர் புத்தாநத்தம் போலீசில் புகார் செய்தார். மணப்பாறை டிஎஸ்பி பிருந்தா விசாரணை நடத்தி வருகிறார். இந்நிலையில் விசாரணைக்காக போலீசார் விமலை அழைத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.