Don't Miss!
- Automobiles இனிமே விமானத்தில் பறக்கும்போது போரடிக்காது.. புதிய சேவையை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் இன்டிகோ!
- Lifestyle Today Rasi Palan 25 April 2024: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு புதிய நபர்களுடன் பழகும் போது கவனம் தேவை...
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
விஜய்யின் காவலன் விநியோக விவகாரம்.. இயக்குனர் ஷக்தி சிதம்பரம் மீது பண மோசடி வழக்கு!
சென்னை: பண மோசடியில் ஈடுபட்டதாக, இயக்குனர் சக்தி சிதம்பரம் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பிரபு நடித்த சார்லி சாப்ளின், சத்யராஜ் நடித்த கோவை பிரதர்ஸ், இங்கிலீஸ்காரன், மகாநடிகன் உட்பட சில படங்களை இயக்கியவர், ஷக்தி சிதம்பரம்.
இப்போது யோகி பாபு ஹீரோவாக நடிக்கும் பேய் மாமா என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார்.
ரொமான்ஸ் தொடங்கியாச்சாம்.. அடுத்த ஸ்போர்ட்ஸ் படம்.. தீவிர கிரிக்கெட் பயிற்சியில் டாப்ஸி!
காவலன் விநியோகம்
இந்த படம் விரைவில் ரிலீஸ் ஆக இருக்கிறது. இதற்கிடையே, நடிகர் விஜய்யின் காவலன் பட விநியோகம் தொடர்பான கடன் பிரச்னையில் இவர் மீது வழக்குப் பதிவு செய்யப் பட்டுள்ளது. விஜய் நடிப்பில் கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியான படம், காவலன். இதை சித்திக் இயக்கி இருந்தார்.
கொடுக்கவில்லை
இது மலையாளத்தில் ஹிட்டான பாடிகார்ட் என்ற படத்தின் தமிழ் ரீமேக். இதில் அசின் ஹீரோயினாக நடித்திருந்தார். இந்தப் படத்தை விநியோகம் செய்ய, அடையாறை சேர்ந்த சுந்தர் என்பவரிடம், ரூ.23 லட்சம் பெற்றிருந்தார் ஷக்தி சிதம்பரம். இந்தப் பணத்தை 10 ஆண்டுகளாக திருப்பிக் கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
ஏமாற்றி விட்டார்
இதுகுறித்து, கடந்த செப்டம்பர் மாதம் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில், சுந்தர் புகார் அளித்தார். அதில், காவலன் படத்தை இருவரும் இணைந்து தமிழகம் முழுவதும் விநியோகம் செய்யலாம் என்று என்னிடம் பணம் கேட்டார். நான் ரூ.23 லட்சம் கொடுத்தேன். ஆனால், விநியோக உரிமையை பெற்றுத்தராமல் ஏமாற்றிவிட்டார்.
கொலை மிரட்டல்
பணத்தைத் திருப்பிக் கேட்டேன். அவர் 5 காசோலைகள் கொடுத்தார். அவை வங்கியில் பணம் இல்லாமல் திரும்பி வந்துவிட்டது. இதுபற்றி கேட்டபோது எனக்கும் என் குடும்பத்தாருக்கும் கொலை மிரட்டல் விடுக்கிறார். அவர் மீது உரிய நடவடிக்கை எடுத்து என் பணத்தை திரும்ப பெற்றுத்தர வேண்டும் என்று கூறியிருந்தார்.
பண மோசடி
விருகம்பாக்கம் போலீசார் வழக்குப் பதிவு செய்யவில்லை. இதையடுத்து நீதிமன்றத்தில் சுந்தர் வழக்குத் தொடர்ந்தார். தற்போது, நீதிமன்ற உத்தரவுப்படி, இயக்குனர் ஷக்தி சிதம்பரம் மீது, விருகம்பாக்கம் போலீசார், பண மோசடி உட்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
-
Dhanush: ராஷ்மிகாவுடன் ரொமான்ஸ் செய்யும் தனுஷ்.. துவங்கியது குபேரா படத்தின் அடுத்தக்கட்ட சூட்டிங்!
-
Sivakarthikeyan: நடிகர் சங்க கட்டட பணிகளுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் ரூ.50 லட்சம் நிதியுதவி!
-
சினிமா என்னங்க.. சீரியல் சான்ஸுக்கே அட்ஜெஸ்ட்மெண்ட் பண்ண சொல்றாங்க.. பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை பகீர்!