Don't Miss!
- Lifestyle கோடை காலத்தில் முட்டை சாப்பிடலாமா? கூடாதா? நிபுணர்கள் சொல்லுவது என்ன?
- Automobiles தார் ரோடு, பாறைகள் நிறைந்த ஆஃப்-ரோடு எதா இருந்தாலும் ஒரு கை பாத்திடலாம்! இந்தியாக்கு ஏத்த கார் விராங்ளர்!
- Technology உங்க மொபைலில் கூகுள் பே, போன் பே, பேடிஎம் செயலிகள் இருக்கா? இதை கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க.. ஏன்?
- News சொத்துக்குவிப்பு வழக்கு இன்று விசாரணை.. அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் கோர்ட்டில் ஆஜர்!
- Sports தமிழக வீரரால் நடந்த மாற்றம்.. குஜராத் அணிக்கு ஆப்பு வைத்த சுப்மன் கில்.. ஆட்டத்தை மாற்றிய ஒரு முடிவு
- Finance ஆதார் அட்டை தொலைஞ்சி போயிடுச்சா.. கவலை வேண்டாம்.. இதை மட்டும் பாலோ பண்ணுங்க..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
வீட்டு வாடகை தரல சார்: பிரபல நடிகர் மீது ஹவுஸ் ஓனர் போலீசில் புகார்
சிக்மகளூர்: சிக்மகளூர் காவல் நிலையத்தில் கன்னட நடிகர் கிச்சா சுதீப் மீது ஒருவர் புகார் அளித்துள்ளார்.
பிரபல கன்னட நடிகரான கிச்சா சுதீப் ஒரு இயக்குனர், தயாரிப்பாளரும் கூட. அவர் வாராஸ்தாரா என்ற கன்னட தொலைக்காட்சி தொடரை தயாரித்து வருகிறார்.
இந்த தொடருக்காக சிக்மகளூர் மாவட்டத்தில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்துள்ளனர். ஆனால் அந்த வீட்டின் வாடகையை கொடுக்கவில்லை என்று உரிமையாளர் காவல் நிலையத்தில் சுதீப் மீது புகார் அளித்துள்ளார்.
இது குறித்து வீட்டின் உரிமையாளரான தீபக் மயூர் கூறும்போது,
வாரஸ்தாரா குழு என் வீட்டில் 3 மாதம் ஷூட்டிங் நடத்தியது. நாள் ஒன்றுக்கு ரூ. 6 ஆயிரம் வாடகை பேசப்பட்டது. அவர்கள் வாடகையில் ஒரு பகுதியை கொடுத்துவிட்டு ரூ. 1.5 லட்சம் பாக்கி வைத்தனர். கேட்டும் கொடுக்கவில்லை.
வீட்டை சுற்றியுள்ள விவசாய நிலத்தையும் நாசப்படுத்திவிட்டனர். அதற்கு இழப்பீடு கேட்டதற்கும் கொடுக்கவில்லை என்றார்.