Don't Miss!
- Technology அள்ளி கொடுக்கும் Jio.. ப்ரீபெய்ட் திட்டங்களில் எக்ஸ்ட்ரா டேட்டா.. OTT.. வாய்ஸ் கால்கள்.. விட்றாதீங்க..
- News வேணாம்.. தப்பாக போயிரும்..! வாக்குச் சாவடியில் முதல்வர் ஸ்டாலின் செய்த செயல்.. அதிசயித்த மக்கள்..!
- Lifestyle எப்பவும் ஒரே மாதிரி சட்னி செய்யாம.. ஒருமுறை தீயில் சுட்ட தக்காளி சட்னியை செய்யுங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்..
- Sports ரூ.14 கோடி வீரருக்கு ஆப்பு.. லக்னோ பிட்சால் சிஎஸ்கே அணியில் நடக்கப்போகும் மாற்றம்.. ருதுராஜ் முடிவு!
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
பெண்களை ஆபாசமாக சித்தரிக்கும் வீடியோ - பாடல்: அனிருத் மீது போலீசில் புகார்
சென்னை: பெண்களை ஆபாசமாக சித்தரிக்கும் வகையில் வக்கிரமாகவும் மோசமாகவும் பாடல் வரிகள் கொண்ட வீடியோவை உருவாக்கியுள்ளதாக பிரபல இசையமைப்பாளர் அனிருத் மீது வழக்கறிஞர் ஒருவர் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.
அனிருத்
ஒய் திஸ் கொல வெறி என்ற ஒரே பாடல் மூலம் பெரும் புகழ் பெற்றவர் அனிருத். சூப்பர் ஸ்டார் ரஜினியின் நெருங்கிய உறவினர். அடுத்தடுத்த படங்களில் ஹிட் பாடல்கள் தந்து முன்னணி இசையமைப்பாளராக உள்ளார்.
மியூசிக் வீடியோ
இவர் புதிதாக Aint nobody ****in with my music என்ற பெயரில் மியூசிக் வீடியோ வெளியிட்டுள்ளார். யுட்யூபில் இந்த வீடியோ காணக் கிடைக்கிறது. ஆனால் கமெண்ட் பகுதியை நீக்கியுள்ளனர் அனிருத் குழுவினர். இந்த வீடியோ படு ஆபாசமாக உள்ளதாக குற்றச்சாட்டு கிளம்பியுள்ளது.
வக்கீல் புகார்
சென்னை மணலியைச் சேர்ந்த ஜெபதஸ் பாண்டியன் என்பவர் இதுகுறித்து சென்னை காவல் துறை ஆணையர் அலுவலகத்தில் கொடுத்துள்ள புகாரில், "பிரபல இசையமைப்பாளர் அனிருத் சமீபத்தில் வெளியிட்டுள்ள Aint nobody ****in with my music என்ற மியூசிக் வீடியோ படுமோசமாகவும் பெண்களை, தாய்மார்களை அவமதிக்கும் வகையிலும் உள்ளது.
சமூக ஒழுங்கு கெடும்
அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ள பாடல் வரிகளோ மிக வக்கிரமாகவும், சமூக விரோதமாகவும் உள்ளன. இதுபோன்ற வீடியோக்களை, பாடல்களை அனுமதிப்பது சமூக அமைதியை, ஒழுங்கை சீர்குலைக்கும் செயலாகும்.
தண்டனை
குறிப்பாக பெண்களின் தாய்மையைக் கூட கேவலமாக சித்தரித்துள்ள இந்த வீடியோ, பெண்களை புனிதமாகக் கருதும் இந்த நாட்டில் பல மோசமான விளைவுகளுக்கு அடிகோலும்.
சினிமாடோகிராப் சட்டம் 1957ன் படி இந்த வீடியோவை வெளியிட்டதற்காக அனிருத் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அவர் வேண்டுமென்றே இந்த சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார். மேலும் இந்திய தண்டனைச் சட்டத்தின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு 2000-ஐயும் அனிருத் மீறியுள்ளார்.
அவர் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்," என்று குறிப்பிட்டுள்ளார்.
-
விர்ஜினிட்டியை எப்போ இழந்த?.. மகனை பார்த்து கேட்குற கேள்வியா இது மலைகா அரோரா.. தீயாக பரவும் வீடியோ!
-
இருட்டு அறைக்கு அழைத்தார்.. ஆண் நடிகர்களுக்கும் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை இருக்கு.. பாலிவுட் நடிகர் வேதனை!
-
மவனே யாருகிட்ட.. மேனேஜரை அலறவிட்ட கார்த்திக்..என்னாச்சு தெரியுமா? கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!