Don't Miss!
- News ஆரம்பிக்கும்போதே "மக்கர்" செய்த ஓட்டு மெஷின்.. நாகையில் ஒரு பூத்தில் மாதிரி வாக்குப்பதிவு தாமதம்!
- Sports என்னங்க சொல்றீங்க? சிஎஸ்கேக்கு வருகிறாரா ஆஸி. வேகம் ஹேசல்வுட்.. உண்மை என்ன?
- Automobiles சீன நிறுவனம் கேட்ட முக்கிய சான்றை வழங்கிய இந்தியா! மத்த நாடுகள வளச்சு போட்டதபோல இந்தியாவையும் வளச்சுபோட போகுது
- Lifestyle Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
பெண்களை ஆபாசமாக சித்தரிக்கும் வீடியோ - பாடல்: அனிருத் மீது போலீசில் புகார்
சென்னை: பெண்களை ஆபாசமாக சித்தரிக்கும் வகையில் வக்கிரமாகவும் மோசமாகவும் பாடல் வரிகள் கொண்ட வீடியோவை உருவாக்கியுள்ளதாக பிரபல இசையமைப்பாளர் அனிருத் மீது வழக்கறிஞர் ஒருவர் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.
அனிருத்
ஒய் திஸ் கொல வெறி என்ற ஒரே பாடல் மூலம் பெரும் புகழ் பெற்றவர் அனிருத். சூப்பர் ஸ்டார் ரஜினியின் நெருங்கிய உறவினர். அடுத்தடுத்த படங்களில் ஹிட் பாடல்கள் தந்து முன்னணி இசையமைப்பாளராக உள்ளார்.
மியூசிக் வீடியோ
இவர் புதிதாக Aint nobody ****in with my music என்ற பெயரில் மியூசிக் வீடியோ வெளியிட்டுள்ளார். யுட்யூபில் இந்த வீடியோ காணக் கிடைக்கிறது. ஆனால் கமெண்ட் பகுதியை நீக்கியுள்ளனர் அனிருத் குழுவினர். இந்த வீடியோ படு ஆபாசமாக உள்ளதாக குற்றச்சாட்டு கிளம்பியுள்ளது.
வக்கீல் புகார்
சென்னை மணலியைச் சேர்ந்த ஜெபதஸ் பாண்டியன் என்பவர் இதுகுறித்து சென்னை காவல் துறை ஆணையர் அலுவலகத்தில் கொடுத்துள்ள புகாரில், "பிரபல இசையமைப்பாளர் அனிருத் சமீபத்தில் வெளியிட்டுள்ள Aint nobody ****in with my music என்ற மியூசிக் வீடியோ படுமோசமாகவும் பெண்களை, தாய்மார்களை அவமதிக்கும் வகையிலும் உள்ளது.
சமூக ஒழுங்கு கெடும்
அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ள பாடல் வரிகளோ மிக வக்கிரமாகவும், சமூக விரோதமாகவும் உள்ளன. இதுபோன்ற வீடியோக்களை, பாடல்களை அனுமதிப்பது சமூக அமைதியை, ஒழுங்கை சீர்குலைக்கும் செயலாகும்.
தண்டனை
குறிப்பாக பெண்களின் தாய்மையைக் கூட கேவலமாக சித்தரித்துள்ள இந்த வீடியோ, பெண்களை புனிதமாகக் கருதும் இந்த நாட்டில் பல மோசமான விளைவுகளுக்கு அடிகோலும்.
சினிமாடோகிராப் சட்டம் 1957ன் படி இந்த வீடியோவை வெளியிட்டதற்காக அனிருத் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அவர் வேண்டுமென்றே இந்த சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார். மேலும் இந்திய தண்டனைச் சட்டத்தின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு 2000-ஐயும் அனிருத் மீறியுள்ளார்.
அவர் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்," என்று குறிப்பிட்டுள்ளார்.
-
மறக்கமுடியுமா சின்னக் கலைவாணரை.. விவேக்கின் 3ம் ஆண்டு நினைவு தினம்.. செடிகளை நடும் செல் முருகன்!
-
நடிகைகள் சகவாசம்.. பாரிலேயே விழுந்து கிடக்கும் ’வி’ எழுத்து நடிகர்.. நடிக்கவே பிடிக்கலைன்னு கண்ணீர்?
-
சூரியன் படத்துல சரத்குமாருக்கு பதில் இவரா?.. கவுண்டமணி சரியான நக்கல் புடிச்ச ஆளு.. பவித்ரன் பேட்டி!