Don't Miss!
- Technology சீன வாட்ச்களை சுளுக்கு எடுத்த இந்திய கம்பெனி.. விலை கம்மி ஆனா 8 நாள் பேட்டரி, கொரில்லா கிளாஸ் 3, IP68 இருக்கு!
- Automobiles ஏர் இந்தியாவின் கடைசி போயிங் 747 விமானம்!! மும்பை ஏர்போர்டில் இருந்து...
- Lifestyle உங்களுக்கு இந்த அறிகுறிகள் அதிகம் தெரியுதா? அப்ப உடம்புல தண்ணீர் ரொம்ப கம்மியா இருக்கு-ன்னு அர்த்தம்... உஷார்.
- Finance ரேஷன் கார்டு: 2 லட்சம் பேர் காத்திருப்பு.. புது அப்டேட் எப்போது வரும்..!
- News யுபிஎஸ்சி வினாத்தாள்களை பிராந்திய மொழிகளில் மொழிமாற்றம் செய்யலாமே.. சென்னை ஐகோர்ட் யோசனை
- Sports இப்படி தான் சிக்சர் அடிக்கனும்.. இளம் அதிரடி வீரருக்கு சொல்லி கொடுத்த தோனி.. கவனித்த ஜடேஜா
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
இந்தியன் 2 படப்பிடிப்பில் 3 பேர் பலியான விவகாரம்.. இயக்குநர் ஷங்கர், நடிகர் கமலுக்கு போலீஸ் சம்மன்!
Recommended Video
சென்னை: இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் நிகழ்ந்த விபத்து தொடர்பாக இயக்குநர் ஷங்கர் மற்றும் நடிகர் கமல்ஹாசனுக்கு சம்மன் அனுப்ப போலீசார் முடிவு செய்திருக்கின்றனர்.
இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு சென்னை நசரத்பேட்டையில் உள்ள ஈவிபி பிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் இரவு 9.30 மணிக்கு லைட்டுகளை செட் செய்யும் பணி நடைபெற்றது.
இரவை பகல் போல் காட்டி படத்தின் சில காட்சிகள் படமாக்கப்பட்டது. இதற்காக உயரமான கிரேன்களில் ராட்சத லைட்டுகள் கட்டப்பட்டன.
தலையில் அடித்துக்கொண்டு கதறியப்படி ஓடி வந்த ஷங்கர்.. இந்தியன் 2 படப்பிடிப்பில் நடந்த அந்த பயங்கரம்!
சினிமா தொழிலாளர்
அப்போது எதிர்பாராத விதமாக கிரேன் அறுந்து விழுந்தது. இந்த விபத்தில் உதவி இயக்குநர் கிருஷ்ணா, புரடெக்ஷன் உதவியாளர் மது, ஆர்ட் உதவியாளர் சந்திரன் ஆகிய மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 10 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவம் சினிமா தொழிலாளர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வழக்குப்பதிவு
இந்த விபத்து தொடர்பாக லைகா நிறுவனம் மீதும் தயாரிப்பு நிர்வாகி மீதும் 4 பிரிவுகளின் கீழ் நசரத்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதேபோல் கிரேன் ஆபரேட்டர், கிரேன் உரிமையாளர், புரொடக்ஷன் மேனேஜர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சம்மன் அனுப்ப முடிவு
இந்நிலையில் இந்த விபத்து தொடர்பாக இயக்குநர் ஷங்கர் மற்றும் நடிகர் கமல்ஹாசன் ஆகியோருக்கு சம்மன் அனுப்ப நசரத் பேட்டை போலீசார் முடிவு செய்துள்ளனர். இதேபோல் விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெறும் 10 பேருக்கும் சம்மன் அனுப்ப போலீசார் முடிவு செய்திருக்கின்றனர்.
போலீசார் திட்டம்
விபத்து குறித்தும் விபத்து நடந்தது எப்படி என்பது குறித்தும் ஷங்கர், கமல் மற்றும் காயமடைந்தவர்களிடம் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர். இதனிடையே இந்தியன் 2 படப்பிடிப்பில் மரணமடைந்த 3 பேருக்கும் சென்னையில் உள்ள திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
-
எப்பாதை போனாலும் இன்பத்தை தள்ளாதே.. ரஜினியின் 171 ஆவது பட டைட்டில் கூலி.. ரசிகர்கள் செம வரவேற்பு
-
என்னை அரசியலுக்கு வரவிடாதீங்க.. நீங்க நல்லது செய்யுங்க.. நான் நடிச்சுட்டு போய்டுவேன்.. விஷால் பேட்டி!
-
Ghilli movie: 20 வருஷம் கழித்து நிறைவேறிய கில்லி அம்மாவின் ஆசை.. இன்னா குத்து குத்துறாங்க!