ராஜ் குந்த்ரா அலுவலகத்தில் இருந்து கைப்பற்றப்பட்ட ஆபாச படங்கள்.. "ஆப்" பை விற்றதும் அம்பலம்!
மும்பை: தொழில் அதிபர் ராஜ் குந்த்ரா கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவரது அலுவலகத்தில் இருந்து ஆபாச பட வீடியோக்களை போலீசார் கைப்பற்றியுள்ளனர்.
பிரபல நடிகையும் மாடலுமான ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா. ஆபாசப்படங்களை தயாரித்து வெளியிட்டது தொடர்பாக நேற்று முன்தினம் இரவு கைது செய்யப்பட்டார்.
வெப் சீரிஸுக்காக தங்களை நிர்வாணமாக நடித்த காட்டுமாறு கூறியதாக 3 நடிகைகள் ராஜ் குந்த்ரா மீது புகார் அளித்தனர். இதனை தொடர்ந்து மும்பை போலீசார் ராஜ் குந்த்ராவை கைது செய்தனர்.

3 நாட்கள் காவல்
ராஜ் குந்த்ரா கைது செய்யப்பட்ட நிலையில் அவரது ஆபாச ட்வீ ட்டுகளும், அவர் பேசிய வீடியோ இண்டர்வியூக்களும் வைரலாகி வருகிறது. இந்நிலையில் ராஜ்குந்த்ராவை 3 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

ஆப் விற்பனை
இதனை தொடர்ந்து போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணையை தொடங்கியுள்ளனர். இதில் தனது ஆபாச பட தொழில் விவகாரத்தை மறைக்க தனது பார்ன் ஆப் ஹாட்ஷாட்ஸை கடந்த 2019ஆம் ஆண்டே 25000 அமெரிக்க டாலர்களுக்கு ராஜ் குந்த்ரா விற்பனை செய்தது தெரியவந்துள்ளது.

ஆபாச படங்கள் வெளியீடு
மேலும் லண்டனை அடிப்படையாக கொண்ட தனது மைத்துனர் பிரதீப் பக்ஷிக்கு சொந்தமான கென்ரின் பிரைவெட் லிமிட்டெட் என்ற நிறுவனத்துக்கு விற்றதும் போலீஸ் விசாரணையில் அம்பலமாகியுள்ளது. குந்த்ரா ஆபாச படங்களை ஹாட்ஷாட் ஆப்பில் வெளியிட்டதையும் போலீசார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

ஆபாச வீடியோக்கள் பறிமுதல்
மேலும் ஆபாச படங்களை தனது வியான் இன்டஸ்ட்ரிஸ் நிறுவனத்தில் இருந்து விற்றதையும் குந்த்ரா ஒப்புக்கொண்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதனிடையே குந்த்ராவின் அலுவலகத்தில் நடத்திய அதிரடி சோதனையில் ஆபாச பட வீடியோக்களையும் போலீசார் கைப்பற்றியுள்ளனர்.


Click it and Unblock the Notifications











