Don't Miss!
- Lifestyle இந்த பழங்களை சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிக்கக் கூடாதாம்... ஏன் தெரியுமா?
- News நன்றி மறந்த நடிகர் சிரஞ்சீவி? ஆந்திராவில் பாஜக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு.. காங்கிரசுக்கு ஷாக்
- Finance முகேஷ் அம்பானி ஸ்டிரிக்ட் ஆர்டர்..!! 'இங்க' தான் ஆனந்த் அம்பானி - ராதிகா திருமணம்..!
- Automobiles இவ்வளவு கம்மி விலையா? பஜாஜ் பல்சர் 400 பைக்கின் அறிமுக தேதி உறுதியானது!
- Technology பிளிப்கார்ட் பிச்சிக்குது.. வெறும் ரூ.13,999 போதும்.. OIS கேமரா.. 6000mAh பேட்டரி.. 1TB மெமரி.. எந்த மாடல்?
- Sports சிஎஸ்கே அணிக்கு சிக்கல்.. பிளே-ஆஃப் வாய்ப்புக்கு ஆப்பு வைத்த 2 அணிகள்.. இனி என்ன செய்ய வேண்டும்?
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
துணிவு பட பாணியில் வங்கியில் கொள்ளையடிக்க முயற்சி..பொதுமக்களிடம் தர்ம அடி.. வசமாக சிக்கிய இளைஞன்!
சென்னை : அஜித் நடித்த துணிவு படத்தை பார்த்துவிட்டு வங்கியில் கொள்ளையடிக்க வந்த இளைஞனை பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்துள்ளனர்.
எச் வினோத் இயக்கத்தில் அஜித் நடித்த துணிவு திரைப்படம் ஜனவரி 11ந் தேதி திரையரங்கில் வெளியானது. இதில், மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜான் கொக்கைன்,சிபி சக்கரவர்த்தி,அமீர், பாவனி ஆகியோர் நடித்துள்ளனர்.
வங்கி கொள்ளையயை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படம் வசூலை வாரிக்குவித்து வருகிறது.
Varisu vs Thunivu: 2வது வாரத்திலும் துணிவு படத்தை பின்னுக்குத் தள்ளிய வாரிசு.. வசூல் விவரம் இதோ!
விபரீதமான பிளான்
திண்டுக்கல் மாவட்டம் பூச்சி நாயக்கன்பட்டியை சேர்ந்தவர் கலீல் ரகுமான். 25 வயதான கலீல் வேலை இல்லாததால் வெட்டியாக பொழுதை கழித்து வந்துள்ளார். துணிவு படம் பார்த்த கலீல் ரகுமானுக்கு, நாமும் வங்கியில் கொள்ளைஅடித்து வாழ்க்கையில் செட்டிலாகிவிடலாம் என விபரீதமான எண்ணம் தோன்றியதால்,வங்கியை கொள்ளை அடிக்க பிளான் போட்டுள்ளார்.
மிளகாய் பொடி தூவி
இதற்காக திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு சாலையில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கு கையில் மிளகாய் பொடி, ஸ்பிரே, கட்டிங் பிளேடு உட்பட பொருட்களை எடுத்துச்சென்றுள்ளார். வங்கியில் 4 பேர் மட்டும் இருப்பதை தெரிந்து கொண்ட கலீல் ரகுமான், ஊழியர்கள் மீது மிளகாய் பொடியை தூவி, 3 ஊழியர்களை கயிற்றால் கட்டிப்போட்டுள்ளார்.
பொதுமக்களிடம் தர்ம அடி
வங்கியில் நடக்கும் நிலைமையை புரிந்துகொண்டு சாதூர்யமாக செயல்பட்ட வங்கி ஊழியர் ஒருவர் வெளியில் ஓடிவந்து கொள்ளை கொள்ளை என கூச்சலிட்டார். இதையடுத்து, அப்பகுதி மக்கள் கும்பலாக வங்கிக்குள் புகுந்து, கலீல் ரகுமானை சுற்றிவளைத்து தர்ம அடி கொடுத்தனர். இதனை அடுத்து திண்டுக்கல் மேற்கு காவல் நிலைய போலீசருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
துணிவு படத்தால் வந்த துணிவு
இதையடுத்து, போலீசார் அவனை கைது செய்து திண்டுக்கல் மேற்கு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், வாழ்க்கை வெறுத்து விட்டதாகவும், இதனால் துணிவு படம் பார்த்து வங்கியை கொள்ளை அடிக்கும் முயற்சியில் ஈடுபட்டதாகவும் தெரிவித்தார். இந்த சம்பவம் திண்டுக்கல் மாவட்டத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.