Don't Miss!
- Lifestyle
Today Rasi Palan 28 January 2023: இன்று இந்த ராசிக்காரர்களின் கடின உழைப்பிற்கான பலன் தேடி வரப்போகிறது...
- News
கட்டடம் இடிந்து இளம்பெண் பலியான விவகாரம்.. இடிக்கும் பணியை உடனே நிறுத்த சென்னை மாநகராட்சி ஆர்டர்!
- Finance
Budget 2023:உணவு, உரம், எரிபொருள் மீதான ,மானியங்கள் குறைக்கப்படலாம்.. அப்படி நடந்தால் என்னவாகும்?
- Sports
ஆடுகளத்தை தவறாக கணித்தோம்.. கடைசி ஓவர் எல்லாத்தையும் மாற்றிவிட்டது.. ஹர்திக் பாண்டியா பேச்சு
- Automobiles
முக்கியமான சாலையை கிழித்து கொண்டு சென்ற விசித்திரமான வாகனம்!! பதற்றத்தில் வழிவிட்ட வாகன ஓட்டிகள்...
- Technology
நம்பமுடியாத அம்சங்களுடன் மலிவு விலையில் இறங்கிய பிரபல நிறுவனத்தின் ஸ்மார்ட்வாட்ச்.!
- Travel
காலம் காலமாக இஸ்லாமியர்கள் வழிபடும் சிவன் கோவில் – மனமுருகி வேண்டினால் கேட்டது கிடைக்குமாம்!
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
துணிவு பட பாணியில் வங்கியில் கொள்ளையடிக்க முயற்சி..பொதுமக்களிடம் தர்ம அடி.. வசமாக சிக்கிய இளைஞன்!
சென்னை : அஜித் நடித்த துணிவு படத்தை பார்த்துவிட்டு வங்கியில் கொள்ளையடிக்க வந்த இளைஞனை பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்துள்ளனர்.
எச் வினோத் இயக்கத்தில் அஜித் நடித்த துணிவு திரைப்படம் ஜனவரி 11ந் தேதி திரையரங்கில் வெளியானது. இதில், மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜான் கொக்கைன்,சிபி சக்கரவர்த்தி,அமீர், பாவனி ஆகியோர் நடித்துள்ளனர்.
வங்கி கொள்ளையயை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படம் வசூலை வாரிக்குவித்து வருகிறது.
Varisu vs Thunivu: 2வது வாரத்திலும் துணிவு படத்தை பின்னுக்குத் தள்ளிய வாரிசு.. வசூல் விவரம் இதோ!

விபரீதமான பிளான்
திண்டுக்கல் மாவட்டம் பூச்சி நாயக்கன்பட்டியை சேர்ந்தவர் கலீல் ரகுமான். 25 வயதான கலீல் வேலை இல்லாததால் வெட்டியாக பொழுதை கழித்து வந்துள்ளார். துணிவு படம் பார்த்த கலீல் ரகுமானுக்கு, நாமும் வங்கியில் கொள்ளைஅடித்து வாழ்க்கையில் செட்டிலாகிவிடலாம் என விபரீதமான எண்ணம் தோன்றியதால்,வங்கியை கொள்ளை அடிக்க பிளான் போட்டுள்ளார்.

மிளகாய் பொடி தூவி
இதற்காக திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு சாலையில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கு கையில் மிளகாய் பொடி, ஸ்பிரே, கட்டிங் பிளேடு உட்பட பொருட்களை எடுத்துச்சென்றுள்ளார். வங்கியில் 4 பேர் மட்டும் இருப்பதை தெரிந்து கொண்ட கலீல் ரகுமான், ஊழியர்கள் மீது மிளகாய் பொடியை தூவி, 3 ஊழியர்களை கயிற்றால் கட்டிப்போட்டுள்ளார்.

பொதுமக்களிடம் தர்ம அடி
வங்கியில் நடக்கும் நிலைமையை புரிந்துகொண்டு சாதூர்யமாக செயல்பட்ட வங்கி ஊழியர் ஒருவர் வெளியில் ஓடிவந்து கொள்ளை கொள்ளை என கூச்சலிட்டார். இதையடுத்து, அப்பகுதி மக்கள் கும்பலாக வங்கிக்குள் புகுந்து, கலீல் ரகுமானை சுற்றிவளைத்து தர்ம அடி கொடுத்தனர். இதனை அடுத்து திண்டுக்கல் மேற்கு காவல் நிலைய போலீசருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

துணிவு படத்தால் வந்த துணிவு
இதையடுத்து, போலீசார் அவனை கைது செய்து திண்டுக்கல் மேற்கு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், வாழ்க்கை வெறுத்து விட்டதாகவும், இதனால் துணிவு படம் பார்த்து வங்கியை கொள்ளை அடிக்கும் முயற்சியில் ஈடுபட்டதாகவும் தெரிவித்தார். இந்த சம்பவம் திண்டுக்கல் மாவட்டத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.