Don't Miss!
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
நடிகை ராதாவிடம் போலீசார் 2 மணி நேரம் அதிரடி விசாரணை!
சென்னையைச் சேர்ந்த வைர வியாபாரி பைசூல் தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றி செக்ஸ் உறவு வைத்துக் கொண்டார் என்றும், அவரை நம்பி 6 ஆண்டுகள் தாலி கட்டாமல் குடித்தனம் நடத்தியதாகவும், தன்னிடமிருந்து நகை மற்றும் பணம் ரூ 50 லட்சத்தை அவர் சுருட்டிக் கொண்டதாகவும் கமிஷனரிடம் புகார் கூறியிருந்தார் நடிகை ராதா.
பைசூல் பேச்சை நம்பி நடிப்பையும் கைவிட்டதாக தனது புகாரில் தெரிவித்திருந்தார்.
இவர் சுந்தரா டிராவல்ஸ், காத்தவராயன் உள்ளிட்ட படங்களில் நடித்தவர். இப்போது சென்னை சாலிகிராமத்தில் தாயுடன் வசித்து வருகிறார்.
ராதாவின் குற்றச்சாட்டுகளை மறுத்த பைசூர், ஏற்கெனவே பலரைத் திருமணம் செய்து ஏமாற்றியவர் ராதா என்று பதிலுக்கு குற்றம்சாட்டினார்.
இந்த நிலையில், ராதாவின் புகாரைப் பதிவு செய்த போலீசார், அதுகுறித்து முதல்கட்டமாக அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். கிட்டத்தட்ட 2 மணி நேரத்துக்கு மேல் அந்த விசாரணை நீடித்தது.
இது தொடர்பாக விசாரணைக்கு வருமாறு வைர வியாபாரி பைசூலுக்கும் சம்மன் அனுப்பியுள்ளனர் போலீசார்.