Don't Miss!
- Lifestyle திருமணம் ஆக இருக்கும் இளம்பெண்கள் இந்த ஜூஸை குடியுங்கள்.. முகம் பொலிவுறும்..!
- News கலக்கிய கள்ளக்குறிச்சி.. அதிகபட்ச வாக்குகள் பதிவு! உற்றுநோக்கும் வேட்பாளர்கள்! கள நிலவரம் என்ன
- Sports உள்ளூர் வீரரை களமிறக்கிய ருதுராஜ்.. இம்பேக்ட் கொடுக்காத சமீர் ரிஸ்வி.. கொஞ்சம் கூட பொறுப்பே இல்ல!
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Technology ஆத்தாடி.. ஒரே போனை வைத்து.. இந்தியாவில் சம்பவம் செய்ய பார்க்கும் Samsung.. பட்ஜெட்ல அறிமுகமாகும் புது Mobile..
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
- Automobiles ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
சர்கார் டிக்கெட் பிரச்சனையால் விஜய் ரசிகர்கள் மீது போலீஸ் தடியடி.. திரையரங்கில் பதற்றம்
காஞ்சிபுரம்: திரையரங்கில் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் போலீசார் தடியடி நடத்தினர்.
ஏஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் சர்கார் திரைப்படம் தீபாவளி ட்ரீட்டாக நாளை இந்தியாவில் ரிலீஸாகிறது. இப்படத்தில் கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி, ராதாரவி, பழ கருப்பையா, யோகிபாபு மற்றும் பலர் நடித்துள்ளனர்.
டிக்கெட் முன்பதிவு செய்வதற்காக திரையரங்கில் கூட்டம் அலை மோதுகிறது. இன்று காலை காஞ்சிபுரத்தை அடுத்துள்ள கூடுவாஞ்சேரி விக்னேஷ்வரா திரையரங்கில் முன்பதிவுக்காக விஜய் ரசிகர்கள் திரண்டனர்.
கட்டுக்கடங்காத கூட்டம் இருந்ததால் டிக்கெட் வாங்குவதில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் அது மோதலாக மாறியது. பிறகு மோதலைக் கட்டுப்படுத்துவதற்காக பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் லேசான தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைத்தனர்.
ஆசையாய் டிக்கெட் எடுக்க வந்த ரசிகர்கள் போலீசாரின் தடியடியிலிருந்து தப்பிக்க அலறியடித்து நாலாபுறமும் சிதறி ஓடினர். அதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.