Don't Miss!
- News 7 மணிக்கு வாக்குப்பதிவு 72%.. நள்ளிரவில் அப்டேட் 69%.. தேர்தல் ஆணையம் வெளியிட்ட தகவலால் குழப்பம்!
- Automobiles 140 பேர் தான் இந்த ஸ்கூட்டரை வாங்க முடியும்! அதுக்கு மேல எவ்வளவு கோடி குடுத்தாலும் கிடைக்காது!
- Sports அமுக்கு டுமுக்கு அமால் டுமால்.. தல கொஞ்சம் தள்ளி நில்லுங்க.. சிஎஸ்கேவை வெளுக்கும் தரமான மீம்ஸ்!
- Lifestyle Today Rasi Palan 20 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பண விஷயத்தில் யோசித்து முடிவெடுப்பது நல்லது...
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
இரண்டே இரண்டு கேள்வி கேட்ட போலீஸ்: கதறி அழுத காவ்யா மாதவன்
கொச்சி: நடிகை கடத்தி மானபங்கப்படுத்தப்பட்ட விவகாரம் தொடர்பாக போலீசார் நடிகை காவ்யா மாதவனிடம் விசாரணை நடத்தியபோது அவர் கதறி அழுதுள்ளார்.
பிரபல மலையாள நடிகை காரில் கடத்தி மானபங்கப்படுத்தப்பட்ட வழக்கில் நடிகர் திலீப் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுத்துள்ளது.
இந்நிலையில் போலீசார் திலீப்பின் இரண்டாவது மனைவியான நடிகை காவ்யா மாதவனிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.
விசாரணை
காவ்யா மாதவனிடம் தொடர்ந்து 6 மணிநேரம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. பெரும்பாலான கேள்விகளுக்கு அவர் திருப்திகரமாக பதில் அளிக்கவில்லை என்று மலையாள செய்தி இணையதளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அழுகை
விசாரணையின் போது காவ்யா மாதவன் அழுதாராம். அவரிடம் முக்கியமாக இரண்டு கேள்விகள் கேட்கப்பட்டுள்ளது. அதற்கும் அவர் சரியாக பதில் சொல்லவில்லையாம்.
பல்சர் சுனி
நடிகை கடத்தல் வழக்கின் முக்கிய குற்றவாளியான பல்சர் சுனி உங்கள் கடைக்கு ஏன் வந்தார்?, பாதிக்கப்பட்ட நடிகையுடனான உங்களின் நட்பு பகையாக மாறியது ஏன் என்று போலீசார் காவியாவிடம் கேட்டுள்ளார்கள்.
பணம்
பல்சர் சுனி காவ்யாவின் கடைக்கு இரண்டு முறை வந்ததற்கான சிசி டிவி வீடியோ ஆதாரம் போலீசிடம் உள்ளது. இந்நிலையில் பல்சர் சுனியை யாரென்றே தெரியாது என காவ்யா தெரிவித்துள்ளாராம்.