Don't Miss!
- Automobiles தேர்தல் வர நேரத்துல பிரம்மாஸ்திரத்தை கையில எடுத்துட்டாங்க! சுங்கசாவடிகளை தூக்க முடிவு பண்ணிட்டாங்க!
- News தமிழ்நாட்டில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு சம்பளம் எவ்வளவு.. இவ்வளவு சலுகைகளா? ஆச்சர்யமான தகவல்கள்
- Technology iPhone-க்கு நெத்தி அடி.. வயர்லெஸ் MagCharge உடன் வந்த முதல் ஆண்ட்ராய்டு போன்.. Samsung இல்லை OnePlus இல்லை..
- Sports ஆர்சிபி வேண்டாம் என ஒதுக்கிய 3 வீரர்கள்.. ஐபிஎல் 2024 சீசனில் பட்டையை கிளப்பும் அதிசயம்
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
- Lifestyle 1000 ஆண்டுகளுக்கு முன் ஒரே இரவில் சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தி ஒரு நாட்டையே வென்ற தமிழ் அரசர்... யார் தெரியுமா?
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
சினிமா மோகத்தில் ஆன்லைன் பாலியல் தொழிலில் சிக்கிய துணைநடிகைகள்...
சென்னை: சினிமாவில் கதாநாயகி ஆகும் ஆசையில் சென்னைக்கு வந்து ஆன்லைன் மூலம் பாலியல் தொழிலில் தள்ளப்பட்ட நான்கு துணை நடிகைகளைப் போலீசார் மீட்டுள்ளனர்.
கனவுத் தொழிற்சாலை என அழைக்கப் படும் திரைத்துறை, உண்மையிலேயே பலருக்கு பகல் கனவாகத் தான் போய் விடுகிறது. சினிமாவில் நடித்தால் பணம் மற்றும் புகழ் என ஒரே நாளில் பிரபலமடைய விரும்பும் பலர், சினிமாவில் நுழைய தேடும் வழி தான் தவறாகப் போய் விடுகிறது. இதனால் அவர்களது வாழ்வே சூன்யமாகி விடுகிறது.
அதிலும், சமீப காலமாக சினிமாவில் கதாநாயகி வேடம் தருவதாக வரும் ஆன்லைன் விளம்பரங்கள் மூலம் அழகான இளம்பெண்கள் பலர் வலுக்கட்டாயமாக பாலியல் தொழிலில் தள்ளப்படும் பரிதாபம் சென்னையில் வேகமாக பரவி வருகிறது.
அந்தவகையில், சினிமா ஆசையில் பாலியல் தொழிலில் தள்ளப்பட்ட நான்கு துணை நடிகைகளைப் போலீசார் மீட்டுள்ளனர்.
மசாஜ் சென்டரில் பாலியல்தொழில்....
சென்னை ஆலந்தூர், ஜி.எஸ்.டி. சாலையில் உள்ள, பிரபல மசாஜ் சென்டரில் பாலியல் தொழில் நடப்பதாக, விபசார தடுப்பு போலீசாருக்கு புகார் வந்ததையடுத்து, குறிப்பிட்ட மசாஜ் சென்டரில் சோதனை நடத்தி நடவடிக்கை எடுக்க கமிஷனர் ஜார்ஜ் உத்தரவிட்டார்.
அதிரடி சோதனை....
அதனைத் தொடர்ந்து கூடுதல் கமிஷனர் நல்லசிவம், துணை கமிஷனர் ஜெயக்குமார், உதவி கமிஷனர் கணபதி ஆகியோர் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் கோபிநாத் தலைமையிலான விபசார தடுப்பு போலீசார் குறிப்பிட்ட மசாஜ் சென்டரில், அதிரடி சோதனை நடத்தினார்கள்.
மீட்பு....
அப்போது, அண்ட்ஜ மசாஜ் செண்டரில் பாலியல் தொழில் செய்து வந்த நான்கு இளம்பெண்களை போலீசார் மீட்டனர். போலீசாரால் மீட்கப் பட்ட அந்த நான்கு இளம்பெண்களும் ஏற்கனவே சினிமாவில் சிறிய வேடங்களில் நடித்துள்ளவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
சினிமா ஆசை...
அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், மீட்கப்பட்ட அந்த இளம்பெண்கள், ஆன்லைன் விளம்பரத்தை பார்த்து, சினிமா கதாநாயகி ஆசையில், வீட்டை விட்டு ஓடிவந்து, புரோக்கர்களிடம் மாட்டிக்கொண்டதும், பின்னர் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டதும் தெரிய வந்தது.
புரோக்கர் கைது...
இவர்களை பாலியல் தொழிலில் தள்ளியதாக, சென்னை கே.கே.நகரைச் சேர்ந்த திரிவேணி (40) என்ற பெண் புரோக்கர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் 3 முறை குண்டர் சட்டத்தில் சிறைக்கு போய் வந்த, பிரபல விபசார தாதா பாண்டியன் (40) என்பவரும் கைதாகியுள்ளார்.