Don't Miss!
- Finance ஹோம் லோன் வாங்க பெஸ்ட் பேங்க் இதுதான்.. ஏன் தெரியுமா..?
- News தமிழகத்தில் அதிக ஓட்டு பதிவான டாப் 10 தொகுதிகளில் 8 இடங்களில் பாஜக வேட்பாளர்கள் இல்லை - புதிய தகவல்
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
- Technology யாரும் நம்பமாட்றாங்க.. தென்கொரிய பெண்ணை ஏமாற்றினாரா எலான் மஸ்க்? 50,000 டாலருடன் எஸ்கேப்பானது யார்?
- Lifestyle மாம்பழம் வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... அப்பதான் ஏமாறாம நல்ல டேஸ்ட்டான பழமா வாங்கலாம்...!
- Automobiles அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
கமல் வீடு, அலுவலகத்துக்கு போலீஸ் பாதுகாப்பு.. ஆர்ப்பாட்டம் நடந்தால் கைது செய்ய உத்தரவு
விஸ்வரூபம் படம் பெரும் பிரச்சினையாகியுள்ளது. ஆரம்பம் முதல் பல்வேறு சிக்கல்களைச் சந்தித்து வந்த இப்படம், தற்போது தடை செய்யப்படும் அளவுக்கு சிக்கலில் மாட்டி விட்டது. இதனால் கமல்ஹாசன் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இந்த நிலையில் கமல்ஹாசனுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியுள்ள இஸ்லாமிய அமைப்புகளைச் சேர்ந்தோர் கமல்ஹாசனுக்கு எதிராக தொடர் போராட்டங்களில் குதிக்கலாம் என்ற எர்பார்ப்பு உள்ளது. இதையடுத்து கமல்ஹாசனின் அண்ணன் சந்திரஹாசன் நேற்று போலீஸ் கமிஷனர் அலுவலகம் சென்று புகார் ஒன்றை அளித்தார். அதில் பாதுகாப்பு கோரியிருந்தார்.
இதையடுத்து இன்று முதல் கமல்ஹாசனின் ஆழ்வார்ப்பேட்டை அலுவலகம் மற்றும் கொட்டிவாக்கத்தில் உள்ள வீடு ஆகியவற்றுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
யாராவது அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டால் உடனே கைது செய்து அழைத்து செல்ல போலீஸ் வேனுகளும் நிறுத்தப்பட்டு உள்ளன. அப்பகுதியில் போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.